Sunday, 16 April 2017

ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் கொத்தும் கிளையும் 1900களில்

ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் கொத்தும் கிளையும் 1900களில்
மிளகு கொத்து
   1.வீரமுடி தாங்கினான்
   2.சேதார்
   3.சேமந்தா.
வெற்றிலை கொத்து
  1.அகஸ்தியர்
   2.மருவீடு
  3.அழகிய பாண்டியன்
தென்னங்கொத்து
  1வாணியன்
  2.வேட்டுவர்
. 3.நடைவேந்தர்
குமுகம் கொத்து
  1.கேல்நம்பி
  2.அன்புதரன்
  3.கௌதமன்
ஈச்சங்கொத்து
  1.சடச்சி
  2.சங்கரன்
  3.பிச்சிபிள்ளை
பனங்கொத்து
.  1.அகிலி
2.லோகமூர்த்தி
. 3.ஜாம்புவர்
ஆதாரம் Edgar Thurston
Castes and Tribes 1900களில்
பொது செயலாளர்
சீரமரபினர் நலச்சங்கம்
மாரிமுத்து தேவர்

Monday, 3 April 2017

பொன். பாண்டித்துரைத் தேவர்



பொன். பாண்டித்துரைத் தேவர்
பிறப்பு :21.03.1867 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு : 02.12.1911 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்: இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
நாடு: இந்திய தமிழர்
கல்வி: தமிழ் பண்டிதர்
பணி: பாலவனத்தம் ஜமிந்தார்
அறியப்படுவது: நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை
பட்டம்: வள்ளல்
சமயம்: சைவம்
பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 - டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.
பிறப்பு:
புகழ் பூத்த தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867ஆம் ஆண்டு பங்குனி 21ஆம் நாள் பிறந்தார்.பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ்ப் புலவர் இவரின் தமிழ் ஆசானாகவும் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இவர்களிடம் இருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற தேவர், இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி எய்தி இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல்கல்வி கற்றார்.

சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துக்களில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணை புரிந்தார் என்பர்.

தமிழ்த்தொண்டு:
அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியர் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்களுக்கும், தேவர் அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.
சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-
திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன்
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன்
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன்
தக்கபொரு   ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .
பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ

நான்காம் தமிழ்ச்சங்கம்:
மதுரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் "தமிழ்ச் சிறப்பு" பற்றி சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்ப்பட்ட துன்பியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந் நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாகவே நான்காம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கியது. இத் தமிழ் சங்கதிற்கு தலைவராக தேவரே பொறுப்பேற்று சங்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுனர்களை அழைத்து, சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்கு சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், 1911ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் நாள் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

Sunday, 2 April 2017

விடுதலைப் போரின் முதல்வன் யார்?


இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை.
மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது.
“திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்”
“வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன்தான்
என்று ம.பொ.சி. அவர்கள் முதல் முழக்கம் என்னும் தமது நூலில்((பக்.11) குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே பக்கத்தில்,
“பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் பாளையக்கார்கள் நிகழ்த்திய போர் இன்று உலகும் போற்றுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம்” என்று உண்மையை எடுத்துக் கட்டியுள்ளார்.இது உண்மையானால்…
உலகும் புகழும்(!) வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே விடுதலைப் போரை தொடங்கியது யார்?
அவன் தான் மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்.
இதை முழுமையாக இருட்டடிப்பு செய்தது ஏன்?
அடுத்து மற்றொன்றும் கூறுகிறார் ம.பொ.சி. அவர்கள்.
“ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி, இந்தியாவிலேயே முதல் புரட்சியாக கிட்டூர் ராணி சென்னம்மாள் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடியாக கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிர்ப்பு கிட்டூரில் தான் உருவாகியது” (பக்.18(1) )[இவர் போராட்ட காலம் 1830-31]
மேலும்,
“விடுதலை போரில் தியாகம் செய்துள்ளவர்களைஎல்லாம் சதி சமய காழ்ப்பின்றி மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியது எனது கடமையாகிறது” (பக்.6)
அவரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? இது தான் காழ்ப்பின்றி இளையோர்களுக்கு உண்மை வரலாறு அறிமுகம் செய்யும் கடமையோ? விருப்பு வெறுப்பற்ற ஒரு வரலாற்று ஆய்வெனக் கருதமுடியுமோ?
1798ல் தான் கட்டபொம்மன். 1755லேயே வீர முழக்கம் இட்டவன் தானே மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்!
யார் பூலித்தேவன்:
[சிறு குறிப்பு:  தொன்று தொட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்குடி முகவை கிழவன் சேதுபதி அவர்களுக்குப் பிறகு தலைவணங்கா அடலேறு நெற்கட்டான் செவ்வல் குறுநில மன்னன் தென்பாண்டி நாட்டின் தானைத்தலைவன் பூலித்தேவன்.  முகவை ஆப்பநாடு மறவர் சீமை மான மறக்குலத் தலைவர் உயர்திரு. சித்திரபுத்திரத் தேவர் அவர்களுக்கும், சிவஞான நாச்சியார் அவர்களுக்கும் இல் பிறந்தவர் தான். பின்னால் தலைக்காவல் முறையில் நெல்லை மாவட்டம் சென்றார். "இந்திய விடுதலைப் போரின் முதல்வன்" - முனைவர் ந. இராசையா  பக்.30 ]
மேலும் ம.பொ.சி.அவர்கள்,
“1767ல் மேஜர் பிராண்டும்,
1783 ல் கர்னல் புல்லர்டனும் பாஞ்சலங்குறிச்சி மீது படையெடுத்தனர்(பக்.42 )”
“பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தளபதி பானர்மேன் தாக்கியது 5 செப்டம்பர் 1798ஆம ஆண்டு தான்(பக்.42)

1755ஆம் ஆண்டு மே திங்கள் மறத்தமிழ் மாமன்னர் மாவீரன் பூலித்தேவன் கோட்டை முதல் வெள்ளைப்படைத் தளபதி கர்னல் ஹெரான் என்பவனால் தாக்கப்பட்டது என்பது தான் ஆவணச் சான்றுடன் கூடிய வரலாறு.
மேலும் மறுக்கமுடியாத சான்றுகள் ஏராளமுண்டு.
நெல்லை மாவட்ட விவரச்சுவடி1917 , பகுதி 1, பக்-70-73, 81-85, 363-387, 389-408, 403ல் விரிவாகக் காணலாம்.
மேலும் அறிஞா  துர்க்காதாஸ் எஸ்.கே. சாமி கூறுகிறார் “தென்பாண்டி நாட்டுத் தமிழ்ப் பாளையங்களைப் பிளந்து அவற்றினூடே புகுத்தப்பட்ட கம்பளப் பாளையங்கள் தமிழத்தின் நிலா, பெருமை ,வருங்காலம் இவைகளைச் சிறிதும் மதியாமல்-தமிழர்களை அன்னியர்களிடமிருந்திலும் ஆதிக்கதாரிடத்திலும் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்” என்று “தமிழ்வீரன் பூலித் தேவர்” என்னும் தமது நூலில்  பக்-32ல்  குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாவீரன் பூலித்தேவனுக்கு 46 ஆண்டுகள் பின்னர் வந்த வீரபாண்டியபுரம் கட்டபொம்மன் முதல் முழக்கம் முழங்கியவன் என்பது ம.பொ.சி. நூலின் பக்-6ல் குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கு தெளிவான பதிலடி கொடுப்பதாக மேற்கண்ட பத்தி இருக்கிறது.
அரைநூற்றாண்டு காலம் வெள்ளையருடன் வீரப்போரிட்டு தன்மானத்தை நிலை நிறுத்திய மாவீரன் பூலித்தேவனின் புகழை ஏன் பாழ்படுத்தவேண்டும்? என்ற கேள்வியை படித்தோரிடம்  விபரம் தெரிந்தோரிடம் விட்டு விடுகிறோம்.எனவே, நாட்டின் வீரவணக்கத்திற்குரிய வீரர்களை தவறாக ஒரு சில அரசியல்வாதிகள் விளம்பரப்படுத்திய காரணத்தால், சுயநலக்காரர்கள் வரிக்கொடுமையாலும் கொள்ளையாலும் தமிழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்ந்து பேசுவதும், மறத்தமிழ் மாண்பை அழிக்கவேண்டுமேன்றே எழுதப்பட்ட எரிபொருளாகும் என்று எடுத்துக்காட்டியுள்ளனர் அறிஞர் பெருமக்கள்.
“அமெரிக்க விடுதலைப் போருக்கும் (1775–1783), பிரெஞ்சுப் புரட்சிக்கும் (1789–1799) முன்னரே  தென்னக விடுதலைக்காக இரத்தம் சிந்திய தியாகத் தலைவன் பூலித்தேவன் அவர்களே”.
1772ல் சின்ன மறவர் நாடு சிவகங்கை சீமையில் வெள்ளைப்படைத் தளபதி வேல்ஸ், அக்னியூ ஆகியோரை எதிர்த்து போரிட்டாரே அரசர் முத்து வடுக நாதத் தேவர்.
பெயர் என்ன இதற்கு?
வட்டுடை அணிந்து வாளெடுத்து வருபகையை எதிர்த்துச் சென்றாரே மறக்குல மங்கை ராணி வேலுநாச்சியார், ஆங்கிலேயர் பிடித்த பகுதியை மறுபடியும் போரிட்டு வென்ற ஒரே பாரத குல வீரப்பெண், தமிழ்மறத்தி.
இதற்குப் பெயர் என்ன?
1766டிசம்பர் 26ல் கொல்லன்கொண்டான் குறுநில மன்னர் மாவீரன் வாண்டையாத் தேவன் கும்பினி படைத்தளபதி பிளின்ட் என்பவனை எதிர்த்துப் போரிட்டாரே. அதற்குப் பெயர் என்ன? மீண்டும் அவர் 1767 ஏப்ரல் 26ல் இரண்டாவது போர் துவக்கினாரே! அது எத்தனையாவது முழக்கம்?
மான மறக்குல வீராங்கனை இராணி வேலு நாச்சியார் அவர்களுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் மே திங்கள் தளபதி ஹெரான் என்பவனை தாக்கினானே நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவன். அதற்குப் பெயர் என்ன?
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை எடுத்துக்காட்டி பெருமிதமும், பெருமையும் அடைய வேண்டுமே தவிர,இருட்டடிப்பு செய்துவிட்டு எடுத்துக்காட்டியுள்ள பகுதி வருமாறு:-
1755க்கும் 44 ஆண்டுகளுக்குப் பின் 1799ல் நாட்டின் சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் தான் விடுதலை இயக்கத்தில் முதல் முதலாக முழங்கியவன் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன? சாதரணமாக தவறு நிகழ்ந்து விட்டது எனக்கருத முடியுமோ? தமிழ்க் குலம் தலைகுனிய வேண்டும் என்பதிலே ஆர்வமோ? அல்லது தமிழன் அல்லாத வேறு ஒருவன் என்று வரவேற்கும் பெருமையோ?
அறிஞர்கள் கருத்து:
இந்த தமிழ் துரோகத்தை மறுத்து பல அறிஞர்கள் தம் ஆய்வுக்கருத்துக்களை கூறியுள்ளனர்.
தமிழ்வாணன்
முனைவர். ந.சஞ்சீவி
முனைவர் எஸ்.கதிர்வேல்
எஸ்.கே.சாமி
பேராசிரியர் வானமாமலை
எட்டயபுரம் நா.குருகுகதாசப்பிள்ளை.
சுப்பிரமணியம்.
வ.வேணுகோபால்.
மங்கள முருகேசன்
எஸ். நடராசன் மற்றும் சான்றோர்
 பலரது எடுத்துக்காட்டுகள் மலைவிளக்காக காட்சி தருகிறது.
“இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” முனைவர்-ந.இராசையா பக்.18-28ல் தெளிவாகக் காணலாம்.
இவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள். என்றாலும் நம் பெருமையை அடுத்தவர்கள் கூறும் போது தான் நாம் உணரமுடிகிறது.
மேல்நாட்டு அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?
திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி, அறிஞர் பேட்டி, ஐ,சி.எஸ். பக்.70-75, 80-339, 376, 411.
திருநெல்வலி சரிதை, அறிஞர் கால்டுவெல், பக்.92, 376.
இந்துஸ்தான் சரிதை – ராபர்ட் ஓர்ம்ஸ் -பகுதி 1 பக்.400-401, 420, 423, 425 -  பகுதி 2 பக்.100, 109, 112, 116-117, 199-200.
மேலும் அறிஞர் அருட்திரு. கிரான்ஸ், ஏ.ஜே.ஸ்டுவர்ட், எச்.ஆக்பெட் போன்ற மேல்நாட்டு அறிஞர் குறிப்பு – ?
“1799ல் உள்ள ஒருவன் முதன் முதலாக முழங்கியவன் என்று சொல்லுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது நாடு?”
இந்தக் கேள்விக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லிதானே ஆகவேண்டும்.
இப்படி எடுத்துக்காட்டிய அறிஞர்கள் ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதால் தமிழர் கட்சித் தனிப் பெருந்தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒதுக்கிவிட்டிருக்கலாம்.
என்றாலும் ! மறத்தமிழர் மாவீரன் பூலித்தேவனையும், வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கனையும் சீர்தூக்கிப் பார்த்து, சரியான கோணத்தில் படம் பிடித்துக் கட்டாமல் தமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப எழுதி இருக்கின்ற திருப்பணியே தான்:-பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே தலைவனாகப் பட்டம் சூட்டிக்கொண்ட, வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கனைப் போல் குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு தான் “முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மு தான்” என்று துணிந்து தீட்டியுள்ளார் என்பதை நாம் உறுதியாக கூற முடியுமே தவிர ஆராய்ச்சித் திறன் இல்லாதவர் ம.போ.சி. என்று குறை கூறுவதற்கு நாம் தயாராக இல்லை.
கட்டபொம்மு நாயக்கனின் பாட்டன் பொல்லாப்பாண்டிய நாயக்கன் சுதந்திர விரோதியாக இருந்த நாளிலேயே நெற்கட்டான் செவ்வல் மாவீரன் பூலித்தேவன் தமிழத்தின் விடுதலைப் போரை துவக்கியவன். தனிப்பெரும் புகழ் பூலித்தேவன் என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வீர வரலாறாகும்.- “வீரத்தலைவர் பூலித்தேவன்” முனைவர் சஞ்சீவி.
அடிபணியாத மாவீரன்?
“பாஞ்சாலங்குறிச்சி மாவீரன் வீரபாண்டியன் 39 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் வாழ்நாளில் ஒரு மணி நேரம் கூட ஆங்கிலேயக் கம்பெனிக்கு அடிபணியவில்லை”
என்று ம.போ.சி. தமது நூலின் பக்-57 பத்தி 1 ல் குறிப்பிட்டுள்ளார். அவர் அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய பெரும் புகழை நாம் பாழ்படுத்த விரும்பவில்லை.
ஆனால்…! உண்மை வரலாறு என்ன? உணர்த்தியாக வேண்டுமல்லவா? தவறான கற்பனைகளை உண்மை போல் சித்தரித்துக் காட்டிய திருப்பணிகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆராய்ச்சித் திறன் அரசியலடிமையாகி விடக்கூடாது.
1798 செப்டம்பர் 5 ல் தான் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை, தளபதி பிளின்ட் என்பவனால் தாக்கப்பட்டது. மீனும் கர்னல் புல்லர்டன் கோட்டையைத் தாக்குகிறான். – “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” – அறிஞர் தமிழ்வாணன் பக்-93.
மாவீரன் மாற்றுருவில் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான்.  கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த வீரபாண்டியன் வீர நடையிட்டான். சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்தான். அந்த இடம் போதுமான பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்த மாவீரன் வேறு வழி நடந்தான்.
புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிகுட்பட்ட திருக்களம்பூர் முட்புதர்கள் அடர்ந்தகாடு கலியபுரத்தில் பதுங்கி இருந்தான் – “க. கொ” – பக். 208
இறுதியில் கலியபுரத்திலிருந்து கைது ஆனான். தூக்கு மரத்திற்கு அவனைக் கொண்டு வரும் பொது
“வீரநடை போட்டு வந்தான் வீரபாண்டியன்”
அதை ம.போ.சி. அவர்களே தமது நூலின் பக்.56 பகுதி 1 ல்
“கோட்டையை விட்டு வெளியேறாமல் அக்கோட்டையைக் கைப்பற்றும் புனிதப் போரில் வீரமரணம் எய்தாமல் போனேனே.” என்று வருந்தினானாம் மாவீரன்.வீரபாண்டியானே கோழையாக மரணம் என்பதை எடுத்துக் கூறிய பின்னர் மாவீரன், வீரமரணம் என்ற பட்டம் சூட்டியது விவாதத்திற்கு உரிய ஒரு கருப்பொருளை கொண்டு உருவாகியது. உண்மைக்கு மாறானது.
மாவீரன் பூலித்தேவன் பிறந்தது 1914 ஆம் ஆண்டு. அவன் விடுதலைப் போரை துவக்கியது 1755 மே திங்கள்!. இறுதிக் காலத்தில் கூட அவன் கோழையாக தூக்குக் கயிற்றில் தொங்கி உயிர்விடாதவன். இம் மறத்தமிழ் மாவீரன் வரலாற்றை மறைக்க எந்த தமிழ் மகனும் துணிவு கொள்ள முடியுமோ?
“பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03.01.1760 ஆம் ஆண்டு. அவன் பட்டம் ஏற்ற நாள் 02.02.1790. அவன் கொலையாகி தூக்கு கயிற்றில் தொங்கிய நாள் 16.10.1799. அவன் போர் தொடங்கிய நாள் 1798 ல் தான்”எப்படியோ “முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்” என்று நாம் பாராட்டி விட்டோம். அதற்கு நாமே இழுக்கு உண்டாக்கக் கூடாது என்பது ம.போ.சியின் பெருந்தன்மையாக இருக்கலாம்.ஆனால்….! அது தம்மை நம்பிப் பின்பற்றும் மக்களுக்கு நெஞ்சார இழைக்கப்படும் வஞ்சம் என்று சொல்லுவது தவறாகாது.
மறவர் மாண்பு:
போர்க்கள மறவர் மாண்பு….?  வெற்றி அல்லது வீரமரணம் அவன்தான் போர் மறவனாவான்.  அவன் களத்திலே சாயும் போது கூட இரு கைகளையும் பிடியளவு மண்ணைத் தமது உள்ளங்கைகளில் அடக்கியவாறே குப்புறச் சாய்வான். எதிரியின் கையில் சிக்கி, விலங்கை சுமந்து தூக்கு கயிற்றில் தொங்கி உயிர்விடுபவன் கோழையே தவிர, வீரனாக மாட்டான். அவன் மறவனாக மாட்டான். மறவனாக்குவதும் அறிவுடைய செயலாகாது. “முன்னேற்ற முழக்கம் – தேவர் முரசு” -வி.ஆ. ஆண்டியப்பத் தேவர். (ஆகஸ்ட்) பக். 84 -5-1
மாவீரர்கள்:
வெள்ளையர்களுக்கு திகில் கொடுத்த மாவீரன் பூலித்தேவனை கையில் விலங்கிட்டு செல்ல முடிந்ததோ?
கொல்லங்கொண்டான் மாவீரன் வாண்டையாத் தேவன் அடிச்சுவட்டையாவது வெள்ளையர் காண முடிந்ததா?
சேதுபதி மீது படையெடுத்து வந்த இராமப்பையன் மற்றும் தளபதியார் வாள் சுழற்றி வன்னியத் தேவனை சிறை பிடிக்க முடிந்ததோ?
சின்ன மறவர் நாட்டின் செங்கதிர் மறத்தமிழ் மாமன்னர் பெரிய மருது வெள்ளையரின் வஞ்சகத்திற்குத் துணிந்து வந்தே தூக்குக் கையிற்றை துணையாக்கிக் கொண்டானே தவிர கையில் விலங்கைச் சுமந்து அவன் கோழையாகியது  உண்டோ? கட்டபொம்மு நாயக்கனுக்கு உயிர் பிச்சை அளித்த மாவீரன் வெள்ளையத்தேவன் மார்பிலே வேல் தாங்கி களத்திலே உயிர்விட்டானே தவிர கையில் விலங்கு சுமந்து தூக்குக் கயிற்றில் தொங்கினானா?  இவர்கள் தானே வீரன் , மாவீரன்  என்பதற்கு இலக்கணமானவர்கள். மறத் தமிழ் மக்கள். வரலாற்றுச் சிற்பிகள்.
ஆனால்.
“கோழைகளை எல்லாம் வீரனாக்கியே தீருவேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு பரணிபாடிய ஒரு சிலருக்கு மாவீரன் பூலித்தேவன் உண்மை வரலாறு தெரியாமல் இருக்க முடியாது. சான்றுகள் ஏராளமுண்டு”.
எனவே, தான் செய்த தவற்றை மறைக்க திரும்பத் திரும்பப் பேசியும், எழுதியும் வந்தால் உண்மையாகிவிடலாம் என்ற எண்ணமும் இருக்கக்கூடும்.
உண்மை தியாகத்தையும் உறுதியாக உள்ள வீரவரலாற்றுச் சுவடிகளையும் ஒதுக்கி தள்ளியும், முழுமையாக மறைத்தும், மக்களைக் கொள்ளையடித்து, பொருள் திரட்டி வந்த ஒருவனை
“வீரபாண்டியன் என்று பச்சைக் குத்திக் கொள்வது என்றால் தமிழனுக்குப் பச்சை துரோகம் செய்வதாகும்” 
கரும்பு வெட்டியவர் கடித்துண்ண முடியாது கைபிசைந்து கலங்கும் நிலைதானே! எதிகால இளையோர்களும் குருடாகவே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடையோர் செயலாகாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே துணிந்து செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டோ?
திருச்சி விசாரணை:
கட்டபொம்முவை திருச்சிக்கு கொண்டு வந்து கும்னியர் விசாரணை செய்தனர்.
என்ன சொன்னான் அந்த மாவீரன்(!)?
கூறுகிறது கட்டபொம்முவின் புகழ் பாடிடும் “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்”  -ஜெகவீரபாண்டியனார் பக்- 130ல் காணலாம்.
அடுத்து:
வீரபாண்டியனின் கழுத்தில் முத்துமாலையை அணிவித்தது யார்?
ஏன் முத்துமாலை பரிசு தந்தனர் கும்பினியர்?
‘கும்பினியாரின் வளர்ப்பு பிள்ளை’ வீரபாண்டியன் என பாராட்டுப் பெற்றது ஏன்?
திரு. எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர், “வீரபாண்டிய கட்டபொம்மன்” நூலின் பக்.45-46.
ஆசரியர் வி.சே.வீலா அவர்கள்,
“வீரபாண்டிய கட்டபொம்மன்”நூலின் பக்.43, 44
“பாஞ்சாலங்குறிச்சி சரித்திரம்” பக்.132
ஆனால் ம.பொ.சியோ….? என்ன சொல்ல.
வந்தான் ஜாக்சன்:-
ஜாக்சன் இராமநாதபுரத்தில் 1797 மார்ச்சு திங்கள் 10ஆம் நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்  கொண்டான். வீரபாண்டியனின் நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்தான்.
03.02.1798ல் வரிப்பணம் கேட்டு வீரபாண்டியனுக்கு கடிதம் எழுதினான்.
03.05.1798ல் மீண்டும் கடிதம் எழுதினான்.
23.05.1798ல் பிளைட் என்ற வெள்ளையன் மூலமாக கடிதம் அனுப்பினான்.
18.08.1798ல் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் வீரபாண்டியனுக்கு!
என்ன எச்சரிக்கை?
[இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
05.09.1798ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆணை?என்ன செய்தான் மாவீரன்(!)?
வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? என்று முழக்கமிட்டான? வரிந்துகட்டிக் கொண்டு படை திரட்டினான? பொங்கி எழுந்தானா? போர் முரசும் முழங்கினானா?

மண்டியிட்டான்: “கலெக்டர் ஜாக்சன் செப்டம்பர் 5ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்று ஆணை?”
ஆனால் வீரபாண்டியன் என்ன செய்தான்?
ஜாக்சன் சந்திக்க சொன்ன பலநாட்கள் முன்னதாகவே புறப்பட்டுவிட்டான். அவன் முகாமிட்ட ஊர்கள் தோறும் பின் தொடர்ந்தான்.என்பதை தமது நூலின் பக். 46 பகுதி 1 ல்  ம.பொ.சி.அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்சனை சந்திக்க வீரபாண்டியனுக்கு எத்துனை ஆர்வம் ஏன்?
ஏறக்குறைய 23 மைல்கள்
400 நாட்கள்
நாலாயிரம் படைகள் சூழ?[கட்டபொம்மன் பக்.316-317 ந.சஞ்சீவி, இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
என்ன உறுதியுடன் நடந்தான்? கையையும் வாளையும் மடக்கி கொண்டு நடந்தது ஏன்?
கொள்ளைக்காரன்:
“இந்த நேரத்தில் கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என்று எவனாவது சொன்னால் அவனைக் குத்தி கிழித்து விடுவார்கள் மக்கள்” என்று “இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” என்னும் தமது நூலின் பக்.19 ல் முனைவர் ந.இராசையா எடுத்துக்காட்டியுள்ளார்.
“கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” என்று அறிஞர் தமிழ்வாணன் பக்.14 ல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் அத்தகைய வெறியர்கள் அல்ல … என்று ஆதாரங்களை அமைதியாகவே எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
ஆனால் ம.போ.சியோ ? அவரது வரலாற்றுக் குழப்பத்திற்கு காரணம்?
உண்மையிலேயே அவரது நிலை கழிவிரக்கமானது தான். தமது வாதங்கள் தோற்றுப் போகும் போது ஆத்திரம் எழுவது இயல்புதான்.
அதுவும் உண்மையை மறைவின்றி எடுத்துக்காட்டிய அறிஞர் தமிழ்வாணன் மீது ஏற்படாமல் இருக்க முடியுமா?
உண்மை கசப்பானது தான். அதை யார் சொன்னால் என்ன? சாடுவது நியாயமாகவே கருத  முடியும்.
அவர் மீது அனுதாபமே ஏற்படுகிறது.
மேலும் சிந்திக்க தூண்டுகிறதே தவிர, மறைக்கச் செய்ய முடியவில்லை.
ஏன்? இளைய தலைமுறையினர் மத்தியில் தவறான வரலாறு இடம் பெற்று விடக் கூடாது என்பதாகும்.
இராமலிங்க விலாசம்:
சேது நாட்டில் வரலாறுச் சிறப்பு மிகுந்த இடம். அங்கு நடந்த சண்டை வீரத்தளபதி வெள்ளை தேவனின் வீரகாவியமாகும். இது தான் கோணத்தலவாசல் சண்டை எனப்படும்.ஆனால்… இதை ம.போ.சி அவர்கள் திரித்துக் கூறியுள்ளார். தான் கொண்ட கொள்கைக்கு எந்தப் பகுதியிலும் இழுக்கு உண்டாகதவாறு கண்காணித்து வந்துள்ளார் என்பது தவிர உண்மை வரலாறாக இருக்க முடியாது.
“கலெக்டர் ஜாக்சன் பேட்டி கொடுத்தான். அமைச்சர் தானாபதி பிள்ளையும், வீரபாண்டிய கட்டபொம்முவும்  சென்று பேட்டி கண்டனர்”
“ஒரு மன்னரிடம் காட்ட வேண்டிய மரியாதையை தன்னிடம் காட்டதாதால் சினங்கொண்டு வெளியேறினான் வீரபாண்டியன்” என்று தமது நூலில் பக்.46 பகுதி 1 ல் குறுப்பிட்டுள்ளார் ம.போ.சி.
சினம் கொண்டு வீரபாண்டியன் வெளியேறி இருப்பானேயானால் உடன் வந்த அமைச்சர் கைது ஆனது ஏன்?
கவலை வீசி இருந்தால் எப்படி தானாபதி பிள்ளை கைது ஆகி இருக்க முடியும்? அவரை திருச்சிக்கு ஏன் கொண்டு போனார்கள்?
கமுதிக்கோட்டை:
செப்டம்பர் திங்கள் 5 ம் நாள் கமுதிக் கோட்டையில் தங்கி இருந்த போது என்ன நடந்தது? வாளையும் கையையும் வாளையும் மடக்கி கொண்டே அலைந்த (!) மறவர் படை வாள் நிமிர்த்தியது ஏன்? போர் முழக்கம் செய்தது ஏன்?
“வெள்ளையத் தேவரே என் உறவினர் எல்லோரும் எனக்குப் பகையாகி விட்டனர். நீங்கள் ஒருவர் தான் எனக்குத் துணை! சண்டை வேண்டாம். இப்போது இராமநாதபுரம் சென்று பார்த்துக் கொள்ளலாம் அமைதி வேண்டும்” என்று வெள்ளையத் தேவனிடம் வேண்டியவன் கட்டபொம்மன் தானே?
உண்மையான வரலாறு விளக்கம் சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
கையெழுத்துப் பிரதி அரசு நூல் நிலையத்தில் இருப்பதாக தமது நூலின் பக்கம் 138 ல் குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்றான்:

“இராமலிங்க விலாசம் மாடியில் கலெக்டர் ஜாக்சன் முகமலர்ச்சியுடன் கட்டபொம்மனை வரவேற்றான். என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து என்னை வந்து பார்த்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லி இருக்கை  கொடுத்தான்.மேலும் கேள்விகளை கேட்கிறான்.
கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்த கட்டபொம்மன், தான் கொண்டுவந்த கப்பப் பணத்தை ஜாக்சன் காலடியில் வைக்கிறான்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சியை கண்ட ஜாக்சன் அதிர்ச்சி அடைந்தான்.  ஆயினும் இதை திருச்சிக்கு தெரியப்படுத்துகிறேன். பதில் வர சில நாட்கள் ஆகலாம். அதுவரை இங்கயே தங்குவதற்கு வேண்டியது செய்கிறேன், என்றான்.
இடுக்கிப் பிடியில் அகப்பட்டுக் கொண்ட கட்டபொம்மன் இடத்தை விட்டு, உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். வயிறு வழியாக இருக்கிறது கொள்ளைக்குப் போக வேண்டும் என்றான்.
குறிப்பிட ஒரு இடத்தை அவர்கள் காட்டினர். மாடிப்படியிலிருந்து இறங்கியவன் நேராக வாயில் நோக்கி ஓட்டமெடுத்தான். கூக்குரல் எழுப்பினர் காவலர்கள். வாயிலில் நின்ற லெப்டினன்ட் கிளார்க் ஓடிவந்து தடை செய்தான்.
கூக்குரல் கேட்டதும் கோட்டைக்கு வெளியே தயாராக இருந்த வீரர்கள் பாய்ந்து சென்றனர். கோட்டை வாயில் நோக்கி, தடை செய்த கிளார்க் என்பவனை கைவாள் கொண்டு வீசினான் மாவீரன் வெள்ளையத் தேவன். கட்டபொம்மன் விடுபட்டு வெளியே வந்தான்.
சின்னக் கடை வீதி:
வீரபாண்டிய கட்டபொம்முவுக்கு தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் அடைந்தான். அதை இராமநாதபுரம் கடைவீதிகளில் காட்டினான். வீதியில் சூறை ஆடிய வீர விளையாட்டுக்கள், நடந்த கொள்ளைகள் பற்றிய நாடோடிப் பாடல்கள் ஏராளமுண்டு. ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கட்ட முடியும் என்பதை “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” நூலின் பக்.170-172 ல் விரிவாகக் காணலாம்.
ஆனால் ம.போ.சி. கூறுகிறார்
“வீரபாண்டியன் குதிரைமேல் ஏறி தப்பிவிட்டான்”
என்பது, சின்னக்கடை வீதியின் திருவிளையாடல்களை மறைப்பதற்காகவே  வரலாறு திசை திருப்பிவிடப் பட்டுள்ளது என்ற உண்மையை விளக்கியாக வேண்டும்.
என் தந்தை (மை பதர்)
இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் ஜாக்சனின் இடுக்கிப் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சியில் பெருவிழா நடத்தினார்.
ஏன்? வீர வெற்றி விழாவா?
சின்னக்கடை வீதியில் தாம் நடத்திய் வீரத் திருவிளையாடல்களின் பூரிப்பு விழாவா?
இல்லை! இல்லை!!
வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு விழா!
கடமையைச் செய்த தளபதிக்கு பாராட்டு விழா ஏன்?
பாராட்டு மட்டுமா, உயர் பட்டமும் வழங்கப்பட்டது ஏன்?
கோட்டை வாசலில் தன்னைத் தாக்க வந்த வெள்ளைப் படையின் துணைத்தளபதி கிளார்க் தலையைக் தமது கைவாள் கொண்டு துண்டித்துத் தமக்கு உயிர்பிச்சை கொடுத்த வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு, அவனது வீரதிர்க்குரிய பட்டம் சூட்டும் விழா தான்.
என்ன பட்டம் சூட்டப்பட்டது? வெள்ளையர்களை, சூழ்நிலையால் எதிர்த்து நின்ற கட்டபொம்மன் டச்சுக்காரர்களிடம் அணுக்கமான உறவு வைத்திருந்தான் என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டின் இக்கட்டுரை விரியும். அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றினான்.
டச்சுக்காரர்கள் தங்களது மதகுருக்களை ஃபாதர், தலைவன், தந்தை என்று தான் அழைத்து வந்தனர். அதையே கைகொண்டான்.
சின்னக்கடை வீதியின் நிகழ்ச்சியால் வேதனையில் உழன்று கொண்டிருந்த மறவர் வீரர்களைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார் கட்டபொம்மன்.
தன்னுயிரை பாதுகாத்த வீரத் தளபதியை ‘மை ஃபாதர்’, ஏன் தலைவன், ஏன் தந்தை என்று பட்டம் சூட்டினான்,
நன்றி மறவாத செயல் அது மட்டுமல்ல.
இந்த உண்மையைத் தெளிவுபடுத்திக் கொண்ள்ள நெஞ்சழுத்தம் அதிகம் வேண்டும்.
‘மை ஃபாதர்’ என்பது மக்கள் பேச்சு வழக்கில் சாதரணமாக பாதர் வெள்ளை என மாறிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்
பாண்டித்தேவன் கொலை:
திருவைகுண்டதிலுள்ள கும்பினியாரின் தாணியக்கிடங்கு கொள்ளையடிக்கப் பட்டது ஏன்?
காவலாரக இருந்த மாவீரன் பண்டியத்தேவனை கொலை செய்தது யார்?
தம்பியின் திருமனதிர்க்கும், தானாபதிப் பிள்ளை மகன் திருமனதிர்க்கும் கும்பினியர் தானியக் கிடங்கு கொள்ளை?
அதைத் தடுத்த திரு. பாண்டியதேவர் கொலையும் ஆகா வேண்டுமோ?
செதூரிளிருந்து கடத்தி வந்த சிவகிரிப் பெயரார் கொலை அனது ஏன்?
இவைகளுக்கெல்லாம் தெளிவான விளக்கம் தேவையாகும்.
இத்தகு செயல்களுக்கு மாவீரன் என்ற பட்டம் சூட்டப்பட்டால், உண்மையான வீரம் தலை குனியத் தான் வேண்டும்.
நடிப்பு தான்:
விடுதலை இயக்கத்திற்கு முதன் முதலாக விட்தொன்றிய மறத்தமிழர் மாமன்னர் பூலித்தேவனின் வீர வரலாற்று அடிச்சுவட்டையே இருட்டடிப்பு செய்துவிட்டும்; சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த கட்டபொம்முவை மாவீரன், முதல் முழக்கமிட்டவன் என்றும் பட்டம் சூட்டிய புதிய கதையாக அமைந்திருக்கலாம்.
ஆனால்…
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை அழித்துவிட்டு எழுதி இருப்பது உண்மை வரலாறு என்று மக்கள் ஒப்புக் கொள்ள முடியுமோ?
எனவே, அதை மறைப்பதற்கும், கதையை உறுதிப்படுத்தி கொள்ளவும் திரைப்படமாக்கப் பட்டது. வீரப் பரம்பரையில் வந்த ஒருவர், பல பதக்கங்கள் பெற்ற சிவாஜி கணேசன் பயன்படுத்தப்பட்டார்.
அவரது நடிப்பு திறமையால், தவறான ஒரு வரலாறு நாட்டிலே உண்மை போல் சித்தரித்துக் காட்டப்பட்டது. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதர்க்காகவே பிறந்தவன் என்னும் உரிமையும் ஆக்கப்பட்டுவிட்டது.
கோழையை வீரனாக்கிய பெருமை சிவாஜியின் நிடிப்புத் திறமையே.  தவறான திசை திருப்பப்பட்டதே தவிர வரலாறு நாயகனுக்கு அல்ல.
வரலாறு புரட்டு:

கவிஞர் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார்களே! “சரித்திரத்தை மாற்றுகிறவன் வரலாற்றுப் புரட்டன்” என்று. வரலாற்றுப் புரட்டும், வஞ்சகமும் தமிழர் வரலாற்றுக் காலம் முதற்கொண்டே உடன் பிறந்ததாயிற்றே!
இத்தகு வரலாற்று புரட்டுக்கு அறிவின் முதிர்ச்சி என்று பட்டம் சூட்டுகிறார்களே!   வாய்மையினை   உயிரோடு கொண்ட இளங்கோ அடிகளின் சிறப்புக் கூறியவர், வழி தவறுவது முறையோ? மறத்தமிழன் பூலித்தேவன் வெற்றிகளை எல்லாம் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் மேல் ஏற்றியது ஏன்?
இது ஆழ்ந்து அகன்ற அறிவின் முதிர்ச்சியின் தீர்ப்பு என்று என்ன முடியுமோ? திரிபு வாதத்தின் உச்சகட்டம் ஆகும் என்றால் தவறாகுமோ?
காய்தல் உவர்த்தல் இன்றி வரலாறுகளை, உண்மைகளை நடுநிலை நோக்கோடு ஆய்ந்து வெளியிட வேண்டுவது தாமே வரலாற்று ஆராய்ச்சியாளன் கடமை. அது தானே வரலாறு. வரலாற்று வல்லுனர்களின் கடமையாகும்.
இதில் வரலாற்று ஆசிரியர் ம.போ.சிவஞான கிராமணியார் எந்த வகை? என்று புரிந்து கொள்ள இயலவில்லை.
இத்துணை எதிர்ப்புகளையும், மறுப்பு நூல்களையும் கண்டும், கேட்ட பின்னரும், மௌனம் சாதிப்பது என்றால்…? அதைத் தாங்கி கொள்ளும் தனித்திறன் பாராட்டுக்குரியதாகும்.
அந்தத் திறமையை தந்தை பெரியார் பாராட்டிப் பட்டமும் கொடுத்துள்ளார்கள். “எதிரிகளின் ஒற்றர்” என்ற பண்பாளர் தான் ம.போ.சிவஞான கிராமணியார்.
அரசியலையே விலைச் சரக்காக அடமானம் வைத்து விட்டு தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மந்திரிப் பதவி கிடைக்கிறதோ என்று நாக்கில் எச்சில் சொட்டக் சொட்ட நின்று, நெஞ்சிலே ஈரம் வற்றிப் போன காரணமாக இருக்கலாம் என்று குறை சொல்ல வேண்டும் என்பது எனது (திரு. வி.ஆ.ஆண்டியப்பத் தேவர்) எண்ணம்.
சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைக்க முடியுமோ? நரி நக்கி கடல் வற்றி விடாது. ஈ குடித்து எருமைப்பால் வற்றாது என்று ஒதுக்கி விடலாம்.
என்றாலும் கூட……..!
கலைஞர் கூறுகிறாரே! தமிழினத் தானைத் தலைவன் தன்மானச் செம்மல்!? மூச்சிலும் பேச்சிலும் முத்தமிழ் மனம் கமழச் செய்யும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் எழுதியுள்ளார்களே,  கலங்காமல்  இருக்க முடியுமோ முதுகுடி மக்கள்.
ஆயிரமாயிரம் ஈட்டிகள் அவர்கள் நெஞ்சிலே பாய்வது போலல்லவா இருக்கிறது.
உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி (!) (ஆச்சர்யம் என்னுடையது)உலகிற்கு வெள்ளிடை மலை போல் எடுத்துக்காட்டி வரும் காலக் கண்ணாடியாம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய குங்குமம் இதழ் “நெஞ்சுக்கு நீதி” என்ற கட்டுரையில் “முதன் முதலாக விடுதலை முழக்கமிட்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற எழுத்தோவியம் வஞ்சமனப்பான்மையில் வழிதவறிச் சொல்லும் வரலாற்றுப் புரட்டர்களும் நெஞ்சு நிமிர்ந்து விடுவார்களே ? சரித்திரக் கொளைஞர்களுக்கும் நெஞ்சுக்கு நீதி புகட்ட வேண்டுவதும், காழ்ப்பு உவர்ப்பின்றி நடுநிலை நோக்கோடு நாலராயும் பண்பையும் எடுத்துக்கட்ட வேண்டுமே  தவிர புரட்டர்களுக்கு ஊன்று கொள்ளகி விடக்கூடாது. மேலும்…!
கலைஞரே எழுதிவிட்டார் என்று வீரம் விளைவித்த மறத்தமிழ் மக்கள் வரலாறுகளை எல்லாம் அளிக்கும் துணிபை வளர்த்துவிடக் கூடும் என்பது தான் மக்களது கவலையாகும்.
(இந்நூலாசிரியர் குங்குமத்தை படித்து விட்டு ஆதங்கப் படுகிறார். ஆனால் நானோ நெற்கட்டான் செவ்வலில் பூலித்தேவன் நினைவிடத்தில் கலைஞர் பொறித்த வசனத்தையும், அதே கலைஞர் சென்னை கோட்டையில்  2008 சுதந்திர தின விழாவில் (தேவர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் பொழுது) பேசிய பேச்சையும் நேரில் கேட்டவன். அது என்னவென்றால் “இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்டபொம்மன், தீரன் சின்னமலை, .__ __ __ __ பூலித்தேவன் . . . . . . . . .  . . .” என்று. என்ன சொல்ல….?)


ன் எழுதினார்?

“நான் மீண்டும் பிறப்பதற்கே விரும்புகிறேன். அதுவம் தமிழ்நாட்டில்; தமிழ் நாட்டிலேயும் கலைஞருடைய தோழனாக இருந்து, தமிழுக்கு வாழ்வு தேடுகிற நிலையையே விரும்புகிறேன்”
(இன்னொரு முறையுமா??????)

என்று தாம் எழுதிய ஒரு புத்தகத்தில் ம.போ.சி. எழுதி இருக்கிறாரே. அந்த அனுதாப அலைகளாக இருக்குமோ என்று ஐயப்பாடும் நமக்கு எழவில்லை. ஆனால்….!
கற்பனை கட்டுரையில், உணர்ச்சியையும் வீரவேசத்தையும் தூண்டி எழுதினால் மட்டும் உண்மை ததோக் கருவூலமாகி விடுமோ?
கடமை என்ன?
அடையாளம் தெரியாத இடத்தில நாலரை ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் 7 இலட்சம் வெண்பொற்காசுகள்  செலவிட்டு கொட்டை கட்டப்பட்டுள்ளது. (பாஞ்சாலங்குறிச்சியில்)
அதை ஏன் என்று கேட்க நாம் முன்வரவில்லை. மக்கள் வரிப்பணம் தானே! நமது கேள்வி:
மாவீரன் பூலித்தேவன் ஆட்சி செய்த அரண்மனை இருக்கிறது. அவன் அமர்ந்திருந்த கருங்கல் சதுக்கம் இருக்கிறது. இடிபாடுகளுடன் காணப்படும் பெரிய கோட்டைகள் இருக்கிறது. அன்னை ஆவுடை நாயகி கோவிலில் வழிபாடு செய்த அறையும் இருக்கிறது. (1986 ல் கேட்கப் பட்ட கேள்வி இது, இப்பொழுது கட்டப்பட்டு அது பாட்டுக்கு இருக்கிறது!!!)
இத்துணை சான்றுகள் இருக்கின்றன. அதச் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கடமை யாருடையது?”மங்கை சூதகமானால் கண்கியில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால்…! எங்கே பொய் மூழ்குவது? என்ற தெய்வீகத் திருமகனார் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
துரோகம்:
எனவே, நாட்டுக்காக பாடுபட்டு நல்லுயிர் ஈந்த பெரியோர்களை முறையாக அடையாளம் கண்டு, இளைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் உண்மை நிகழ்சிகளை வரலாறுகளை எடுத்துக் கூறுவது தான் முறையாகும். நடுநிலை நோக்கோடு அரசு நீதியை  நிலைநாட்டும் நேர்மை துலங்கும் படி செய்யும் என்று நம்புவோமாக.
தரங்கெட்ட ஏடுகள்:
மேலும், வழிப்பட்டுக்குரிய மாவீரர்களை எல்லாம் மறைப்பதும், வழிப்பறிக் கொள்ளையர்களைப் போற்றுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவது தவறாகுமோ?
நாட்டின் மானம் காத்த உயிர்த் தியாகம் செய்த மான மறத்தமிழ் மக்களை மறைத்து விட்டு, நாடோடியாக வந்து வயிறு வளர்க்க வந்த, மக்களை கொள்ளை அடித்து, வரிவசூல் செய்பவர்களை வாழ்த்துவதற்கு நமது நாவையும், வரிவரியாய் புகழ்ந்து எழுதுவதற்கு நமது கையையும் பயன்படச் செய்வது தாய் நாட்டிற்கு செய்யும் துரோகமுமாகுமல்லவா?
மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சியை உருவாக்கிக் காசுகள் பெரும் எச்சில் ஏடுகள் சில! முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மன் என்று தரங்கெட்ட புரட்டு ஏடுகளைச் சான்று காட்டிப் பணத்தை அறுவடை செய்து கொள்கின்றனர். வரலாற்று உண்மைகளை எடுத்துக்கட்ட வேண்டியது ஏடுகளின் கடமை. அதை மறந்து கவர்ச்சியில் கை நிறைய காசு சேர்த்துக் கொள்கின்றனர். வரலாறு பற்றி என்ன கலவை. காசு எப்படி வந்தால் என்ன?
பாதாளச் சிறை:
தளபதி பானர்மென் பாஞ்சை கோட்டையைக் கைப்பற்றிய போது அங்கிருந்த பாதாளச் சிறையை கண்டான்.
அங்கே குரும்பூர், மாநாடு என்னும் ஊர்களிலிருந்து  சில பெரியவர்களை கட்டபொம்மு கடத்தி வந்து, பலவந்தமாக தூக்கிவரப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தங்களை மிருகங்களினும் கேவலமாக நடத்தி வந்தனர் என்பதைத் தெரியப் படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் கொடுத்த வாக்கு மூலம் அரசு பதிவேடு (ரிக்கார்ட்) அலுவலகத்தில் இருக்கிறது என்று அறிஞர் தமிழ்வாணன் தனது நூலின் பக்.140 எடுத்துக்காட்டியுள்ளார்.
எழுச்சி பெற வேண்டும்:
எனவே, வீரர்களை அடையாளம் கண்டு வழிபடுதல் வீரர் வழிச் சந்ததினரேயாவர். ஆயிரமாயிரம் அறிய கருத்துக்களை, தியாக வீரர்கள் வரலாறுகளை எல்லாம் தேடிக் கொணர்ந்து தமிழக வரலாற்று உண்மைகளை தூண்டித் துருவி ஆராய்ந்து, நிகழ்ச்சிகளுக்குத் தகுந்தவாறு நினைவாஞ்சலி செய்ய வேண்டும். இனமான உணர்வு பெற வேண்டும்.
அன்று தான்……..!
உண்மை வரலாறுகளை அழிக்க எண்ணித்  திட்டமிட்டு வரலாறு புரட்டர்களை அடையாளம் காணமுடியும். எழுதுங்கள் உண்மை வரலாறு. உடலிலே உதிரம் வற்றும் வரையிலும் ஓயாமல் எழுதுங்கள். தவறினால் தேசிய மக்களது வரலாறுகள் முழுமையாக அளிக்கப்பட்டு விடும் என்பது உறுதி.  அடிச்சுவடு கூடத் தெரியாத நிலையில் இளையோர்கள் அவதிப்பட நேரிடும்.
அன்று மாவீரன் பூலித்தேவரின் , வீர முரசுகள், எழுப்பிய சுதந்திரக்குரல்கள், ஏற்றிவைத்த சுதந்திரச் சுடரொளி நீருபூத்த நெருப்பாக இருந்தது. அது தான் 1947 ஆகஸ்ட் புரட்சி விடிவெள்ளி. ஒவ்வொரு தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் பதிய வைக்க வேண்டியதாகும்.
எனவே விடுதலைக்கு முதல் முழக்கம் முழங்கிய மாவீரன் பூலித்தேவரது வரலாறுகளை பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவர்களுக்குப் படமாக்கப் படவேண்டும்.
வாழ்க! வாழ்க!! உத்தம தியாகிகள் புகழ்!!!


நன்றி : http://thevar.co.இன்

''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?''

நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில
இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா
பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை
உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.



''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?''

''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ''தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை'' என்று கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ''சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை'' என்று தெரிவித்துவிட்டது.




'நேதாஜியினுடையது' என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச்
சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசு
தடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும்
ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று
அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித
காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது
என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்'' என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,

“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம்
மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து
ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது
என்றார்.

“எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை, சுமார் 800
ஃபைல்கள் 'ரகசிய ஃபைல்கள்' என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம்
உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசிய
ஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக 'பொது ஆவணமாக'
அறிவிப்பார்கள்.

இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது
பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம்
அறிந்து கொள்ளும்” என்கிறார்.

''இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?''

“எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட் டவோ கூடாது'' என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்'' என்கிறார் பரூண்
முகர்ஜி.

''நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து
விட்டதாகத்தானே கூறி வந்தது?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,

''மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்கூடும்' என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், 'பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி' என்கிற
கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. 'கும்நாமி பாபா'
என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து
வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும்
தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற
செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, 'அவருடைய உடைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு' உத்திரப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.



பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம்,
ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும்
அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய
புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும்
அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின்
உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய
கூட்டாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால், பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971- ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவியார் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், 'நான் மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்' என்று சொல்லியிருக்கிறார்.இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி'' என்கிறார்.



'நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே! அந்த மர்மமும் விலகவில்லையே?''

''இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை
பெற்றிருந்தது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும்
நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும்.அதுதான் உண்மையும்கூட.'' என்கிறவர்,

''நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை. சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத 'இராதா வினோத்பால்' என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்'' அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

நன்றி: சூரியகதிர் நாளிதழ்

Saturday, 1 April 2017

சிலம்பம்

சிலம்பம்
Silambam vector.svg
வேறு பெயர்Silambattam, Chilambam
நோக்கம்Stick fighting
தோன்றிய நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
ஒலிம்பிய
விளையாட்டு
yes
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர்தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின்வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல்என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள்,உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவானதற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பலதமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள்பெண்கள்என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.திருவிழாகோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி,தூத்துக்குடிகன்னியாகுமரிமாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.[1]


பொதுநலம் மற்றும் மருத்துவ பயன்கள்:

பயிற்சியாளர் அல்லது சிலம்பம் மற்றும் காய் சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி, சுற்றோட்டத் தொகுதி பொறுமை, தசை வலிமை.[


வரலாறு:
மக்கள் தம்மை சிங்கம்புலி போன்றவிலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்திகோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப்பயன்படுத்தினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாகவளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில்மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டிகத்தி,வேல்வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்தஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப்போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழகமூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத்,தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம்மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

ஆய்வுகள்:

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச்சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைசென்னை அருங்காட்சியகத்தில்வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்தியபோர் வீரர்கள் பயன்படுத்திய நான்குஅடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சொல்பிறப்பு:

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லப்படுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி,மரங்களின் இலைகள் காற்றில்அசையும் ஓசை, விலங்குகளின்இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்குமேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.[3]

இலக்கியக் குறிப்புகள்:
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள்பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தஅகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில்"கோல்' என்ற பெயரிலும்,கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது.திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்றநூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும்உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை,மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.[3]
நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றானகட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன்ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை
"கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும்
கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே;
சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள்
தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை"
என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்.[3][4]


சிலம்பின் உட்கூறுகள்தொகு

மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.

மெய்ப்பாடம்தொகு

மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம்.

உடற்கட்டுப்பாடம்தொகு

குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்.

மூச்சுப்பாடம்தொகு

மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.

குத்துவரிசைதொகு

முதன்மை கட்டுரை: குத்துவரிசை
சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாககுத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள்,புலியானைபாம்புகழுகுகுரங்குஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.

தட்டுவரிசைதொகு

ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.

பிடிவரிசைதொகு

எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது,யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள்ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.

அடிவரிசைதொகு

முதன்மை கட்டுரை: அடிவரிசை
ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்துகற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.[5]சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு,தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு,குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர்விளையாட்டு, சக்கர கிண்டிகிளவிவரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன.

சிலம்பத்தடிதொகு

சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்றமரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில்இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம்வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பாட்ட வகைகள்தொகு

சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
ஆகியனவாகும்.

சிலம்பாட்டச் சுற்று முறைகள்தொகு

சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை,கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.
  • ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது,
  • இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது
என இரு முறைகளும் இதில் உண்டு.

ஆயுதப் பிரிவுகள்தொகு

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன.ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருதுவளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

கராத்தேவும் சிலம்பமும்தொகு

கராத்தே என்ற வீர விளையாட்டின் "காட்டா" (kata) என்ற பயிற்சி, சிலம்பத்தின் கதம்பவரிசை ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும்.

சிலம்பப் போட்டிதொகு

தமிழர்களின் போர் முறையாகவும்தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில்திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது[6]. சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இதுதற்காப்புக் கலை.

சிலம்பம் கலை பயிற்றுவித்தல்தொகு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும்கேரளா மாநிலங்களிலும், இலங்கை ,மலேசியாபிரான்சுகனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

பயன்கள்தொகு

சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடிநரம்பும்தசைகளும்இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறுஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல்விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

உசாத்துணைகள்தொகு

  • ஜே. டேவிட் டேனியல் ராஜ், சிலம்பம் - அடிமிறைகளும் வரலாறும், காரைக்குடி அழகப்பர் கல்லூரி வெளியீடு, 1971
  • ஞா. தேவநேயப் பாவாணர், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1966
  • டாக்டர் இரா. நாகசாமி, கல்வெட்டுக் காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியீடு, ஏப்ரல் 1974
  • டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
  • வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரை பக். 3-4.
  • சேலம் சிலம்ப ஆசான் திரு. முருகேசன் அவர்களுடன் நேரடியாக உரையாடிப் பெற்ற செய்திகள்.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...