1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரைகாவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
வரலாற்று பக்கங்களில் மறைக்கமுடியாத உண்மைகள் சில:
தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.
இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்டதவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணிதேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.
கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் அரசின் வெறித்தனம்
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.
தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.
இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.
தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:
தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
_
1957 - முதுகுளத்தூர் ரம்--1
முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்.
அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.அந்த மாநாட்டில் தென் மண்டல போலிஸ் ஐ.ஜி. ராமநாதபுரம் ஜில்லா எஸ்.பி., டி. எஸ்.பி., ட்யூட்டி சூப்ரெண்ட், ஆ.டிஒ. ஆகியோர் அதிகாரிகள் தரப்பிலும், ஸ்ரீவில்லிபுத்துhர் பார்லிமெண்ட் உறுப்பினர் உ. முத்துராமலிங்கத்தேவர், சட்டசபை உறுப்பினர்கள் டி. எஸ். சசிவர்ணத் தேவர், சிவகங்கை டி. சுப்பிரமணிய ராஜா, அருப்புக்கோட்டை எம்.டி.ராமாசாமி, திருவாடனை கே.ஆர். எம். கரியமாணிக்கம், ஜில்லா போர்டு உறுப்பினர்கள் பா.ரா. நவசக்தி, டி. முத்துசாமித் தேவர் ஆகியோர் பார்வர்ட் பிளாக் கட்சி தரப்பிலும் -கமுதி பஞ்சாயத் போர்டு தலைவர் சௌந்திரபாண்டி நாடார், பேரையூர் வி.எம்.எஸ். வேலுசாமி நாடார், முதுகுளத்தூர் அருணகிரி, இராமநாதபுரம் சேதுபதி சகோதரர்கள் காசிநாத துரை, சிதம்பர நாத துரை ஆகியோர் காங்கிரஸ் கட்சி தரப்பிலும்,சாத்தையா, பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேல், பேரையூர் பீட்டர் ஆகியோர் அரிஜனத் தரப்பிலும் கலந்து கொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கேட்டும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் தலைமை வகித்தார். முதலில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களைத் தனி அறைக்கு அழைத்து, அவர்கள் கூறிய விளக்கங்களைக் கேட்டுக் கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளையும், அரிஜனப் பிரதிநிதிகளையும் அழைத்து விவரங்களைக் கேட்டார்.பின்னர் பொதுவான நிலையில் எல்லாத் தரப்பினர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டை ஆரம்பித்து வைக்க கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் பேசியதாவது :" இந்தத் தாலுகாவில் இருதரப்பினரின் வேறுபாட்டால் நடந்து வரும் நிகழ்ச்சிகளை எல்லோரும் அறிவீர்கள்.
மறவர்கள், நாடார்கள், அரிஜனங்கள் இதர வகுப்பினர் அனைவரும் கடந்த கால சம்பவங்களை மறந்து, எல்லோரும் ஓரினம் என்ற மனோபாவங்கொண்டு ஐக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்."
"இந்த ஜில்லாவின் தலைமை அதிகாரி என்ற முறையில் இவ்வட்டாரத்தில் அமைதி நிலவச் செய்யவும், எல்லோரையும் வேறுபடின்றி வாழ்விக்கச் செய்யவும். எனக்குள்ள கடமையை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்." "எந்த வகுப்பாரும் சட்டத்திற்குப் புறம்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு, தங்கள் குறைகளைச் சட்டபர்வமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சட்டத்தையும் ஒழுங்கையும், மதித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜில்லா கலெக்டர் பேசி முடித்தார்.
பின்னர், உ. முத்துராமலிங்கத்தேவர் எம்.பி. பேசியதாவது : "இத்தாலுகாவின் மறவர்களுக்குச் சொந்தமான ஆடு, மாடு போன்ற உடைமைகள் ஆயிதங்களால் பயமுறுத்தி அபகரிக்கப்படுவதற்கு அரிஜனங்களைத் தூண்டி விட்டு உற்சாக மூட்டுவதற்கான முழுப்பொறுப்பும் காங்கிரசையே சேரும். மறவர்கள், யாதவர்கள், சேர்வைக்காரர்கள், நாயுடு இனத்தார் ஆகியோரை காங்கிரஸ்காரர்களால் தூண்டி விடப்பட்ட அரிஜனங்கள் பலவந்தமான முறையில் பெண்களை அலைகழிப்பது போன்ற பல இன்னல்களுக்கு இலக்காகி வருகிறார்கள். இச் செயல்களால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட மேற்குறித்த இன மக்கள், தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து பாதுகாப்பிற்காக, பக்கத்துக் கிராமங்களுக்கு, வீடு, வாசல், உடமைகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் அவர்களது விவசாயமும் கெட்டு, வாழ்க்கை நிலையும் சீரழிந்து விட்டது. இது போன்ற சட்டவிரோத செயல்களால், இதுவரை கிட்டதட்ட நுhறு குடும்பங்களுக்கு மேல் மிகவும் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கொடுமைகளுக்கு இலக்கானவர்கள் போலிசில் புகார் செய்தும் புண்ணியம் இல்லை. இதுவரை எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டதில் போலிஸ் தரப்பிலிருந்து எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை".
"அதற்குப் பதிலாக, காங்கிரசைச் சேர்ந்த அரிஜனங்கள், நாடார்கள் பக்கமே சாதகமாக இருந்து வருவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டத்தில் மற்றொரு சம்பவத்தை இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்." சமீபத்தில் பேரையூர் என்ற கிராமத்தில் வெடி விபத்துச் சம்பவம் ஒன்று நடைபெற்து. அதில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மூக்க நாடார் என்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகக் கூறி, அதன் உண்மை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. பயங்கரமான அந்த வெடி விபத்தில் செத்தது மூக்க நாடார் மட்டுமல்ல, மேலும் சிலர் செத்திருப்பதாகத் தெரிகிறது. அப்பயங்கர வெடிகள், அரசாங்க லைசென்ஸ் இன்றி தயாரிக்கப்பட்டவை. அத்தனையும் மூடி மறைக்கப்பட்டு விட்டது." ஆனால், இம்மாதிரி சம்பவத்தில் மறவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நடவடிக்கைகளை வேறு வழியில் திருப்பி, கடுமையாக்கி, பிரமாதமாக பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். கை வெடிகுண்டுகள் செய்வதில் தேர்ச்சி பெற்ற மூக்க நாடாரை, அருப்புக் கோட்டையில் இருந்து பேரையூருக்குக் கூட்டி வந்து, காங்கிரஸ் தரப்பினர் வெடிகள் தயாரிக்கச் செய்ததன் நோக்கம் பட்டவர்த்தனமானதாகும். இதோடு காங்கிரஸ் தரப்பினர்களில், ஒரு பாவமும் அறியாத அரிஜனங்கள் கலவரங்களுக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். இது தவிர, ராமநாதபுரம் ஜில்லா போலிசுக்குச் சொந்தமான மோட்டார் லாரி ஒன்றின் மூலம் மூங்கில் கம்புகளும் தடிகளும் கடலாடிக்கு அருகே உள்ள காவக்குளம் கிராமத்தில் உள்ள அரிஜனங்களுக்கும் காங்கிரஸ் தரப்பினர்களுக்கம் விநியேகிக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் அவர்களின் கவனத்திற்கும் போலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மேலும் பலவித ஆயுதங்களும் வேறு ஊர்களில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்கள் அரிஜனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதெல்லாம் அரசாங்க விநியோகம் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்களாம் இதனால், அரிஜனங்கள், காரணமின்றி மறவர்களை இழுத்துத் தாக்க வசதிப்படுகிறது. அதே சமயம் அரிஜனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற தெம்பு ஒரு தரப்பில் ஏற்படுகிறது." "காங்கிரஸ் தரப்பினர்களும், போலிஸ் தரப்பினரில் சிலரும் அரிஜன வாலிபர்களை ஏவி விட்டு, தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை என்ற அடிப்படையில், கிராமப் பொது கிணறுகளில் தண்ணீர் மொள்ளச் செல்லும் மறவர் குலப் பெண்கள் அவமானப்படும்படியான முறையில் செய்ய வைப்பதால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மறவர்கள் மிக மிக மனம் நொந்து சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்" என்று தேவர் கூறி முடித்தார்.
காங்கிரஸ் தரப்பு நாடார்கள் சார்பில், பேரையூர் வி.எம்.எஸ். வேலுக்காமி நாடார், "மறவர்கள், நாடார்களுக்கு எதிராகப் பொது நிதி திரட்டி வருகிறார்கள். நாடார் கடைக்ளில் சாமான்கள் வாங்க விடாமல், மறவர்களை மறியல் செயயச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறினார். இதை மறுத்து தேவர், "இந்தப் புகார் உண்மை அல்ல, குறிப்பிட்ட கிராம மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. அவ்வழக்கை நடத்துவதற்காக அக்கிராம மக்கள் தங்களுக்குள் பொதுநிதி வசூலித்தார்கள். இது தவிர, நாடார் கடைகளில் சாமான் வாங்கக் கூடாது என்று மறவர்களால் கட்டுப்பாடு செய்யப்பட்டதாகவோ, மறியல் செய்யப்பட்டதாகவோ ஏதேனும் புகார் இருந்தால், உடனே அதை மாற்றுவதற்கான ஏற்பாட்டை நானே செய்து, அந்த மறியலைத் தடுக்கிறேன். ஏதேனும் அம்மாதிர் புகார் உண்டா? என்று கலெக்டர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்.
"அம்மாதிரி மறவர்கள் மீது எவ்விதப் புகாரும் இல்லை. நாடார்கள் தரப்பு புகாருக்கு ஆதரவான வகையில் ஒன்றும் பதிவாகவுமில்லை என்று கலெக்டர் கூறினார்.
பிறகு அரிஜன தரப்பில் கலந்து கொண்ட பேரையூர் பீட்டரும், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேலுவும் பேசியதாவது :"அரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு எதிராக மறவர்கள் இயங்கி வருகிறர். இதர ஜாதி இந்துக்கள் மாதிரி அரிஜனங்கள் புது உடை தரித்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மறவர்கள் விரும்புவதில்லை என்று கூறினார்.
அவர்களின் கூற்றுக்குப் பதில் அளிக்கும் முறையில் தேவர் கூறியதாவது : அரிஜன முன்னேற்றத்தில் எல்லோரையும் விட அதிக அக்கறை கொண்டவன் நான். ஜாதி பேதத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்ட சிலரில் நான் முதன்மையானவன். ஜாதி, பேதத்தை ஒழிப்பதற்காக 1932-ஆம் ஆண்டில் ஒரு அரிஜனது வீட்டில் போய்ச் சாப்பிட்டேன். திரு. வேலுச்சாமி நாடார் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன் நாடார்களின் வீடுகளில் மறவர்கள் சாப்பிடுவதில்லை. என்னைத் தொடர்ந்து இந்த ஜாதி வேற்றுமை வேரற்றுப் போகட்டும் என்பதற்காகவே, நான் முதன் முதலில் நாடார் வீட்டிலும் அரிஜன் வீட்டிலும் சாப்பிட்டு வழிகாட்டினேன். மேலும், வித்தியாசம் மிகுந்திருந்த கமுதி போன்ற இடங்களில் உள்ள கோவில்களை, அரிஜனங்களுக்குத் திறந்து விடுவதில் நான் முன்னின்று பாடுபட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தவிர, காங்கிரஸ் மாதிரி பார்வர்ட் பிளாக் அரிஜன உயர்வுக்கத் தன்னை அர்பணித்துக் கொண்ட கட்சியாகும். உதாரணமாக, பார்வர்ட் பிளாக் சார்பில் நின்ற அரிஜன அபேட்சர்கருக்கு தான் அரிஜனங்களும் மறவர்களும் இதர இனத்தார்களும் பெருமளவு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தேர்தல்களில் இது நிதர்சனமாகி இருக்கிறது. இந்நிலையில் அரிஜன உயர்வுக்கு மறவர்கள் எதிர்ப்புப் புரிகிறார்கள் என்று குறை கூறுவது அழகல்ல" "மேலும், அரிஜன உயர்வு என்பது ஒரே இரவில் சாத்தியமானதல்ல. இருதரப்பிலும் நாளடைவில் பரஸ்பரம் மனமாற்றம் அடைய வேண்டும். தாழ்த்தப்பட்டோர் உயர்வு என்றால், மறவர், யாதவர், நாயுடு போன்ற ஜாதி இந்துக்களின் இளம் பெண்களிடம் விஷமம் புரிவதும் அல்ல. அம்மாதிரி எல்லாம் அரிஜனங்கள் மோசமான முறையில் தூண்டி விடப்படுவதால் தான் இந்த முறைகேடுகள் சம்பவிக்கப்படுகின்றன என்று கூறி முடித்தார் தேவர்.
கடைசியாக மாவட்ட கலெக்டர், கடந்த கால ஐக்கிய பேத உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எல்லா தரப்பினருமே மறந்து, பொது விவகாரங்களில் ஒழுங்கையும் மதித்துக் கடைபிடித்து, இத்தாலுகாவில் அமைதியை நிலை நாட்டி, எல்லோரும் சுமூகமாக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வாழ வசதி செய்ய ஆவன செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.
(அரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகமும், பார்வர்ட் பிளாக் சட்ட மன்ற உறுப்பினர் எ.பெருமாளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.)
பின்னர் கலெக்டர், எல்லாத் தரப்பு தலைவர்களும் ஒன்றுபட்டு, இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான கிராமங்களுக்குப் போய் பொதுக் கூட்டம் போட்டு, ஒரே மேடையில் பேசினால், இந்தத் தாலுகாவின் சுமுக நிலைமைக்கு மிகமிகப் பயன் உள்ளதாக இருக்கும். சமாதான மாநாடு வெற்றி பெற்றதாகவும் அமையும் என்று கூறினார். இந்த யோசனைக்கு தேவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், நாடார்கள் மறுத்து விட்டனர். முடிவில், இப்பிராந்தியத்தில் வாழும் எல்லா இன மக்களிடையே சமதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுத்த கலெப்டருக்கு நன்றி கூறினார். எல்லாரிடமும் ஐக்கியத்தை உண்டாக்கும் வகையில் அதிகாரிகளுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பதாய் தேவர் உறுதி கூறினார்.மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கலெக்டர். அனால், மாநாடு முடிந்த மறுநாளில் …..
கீழத்தூவல் படுகாலை சமாதான மாநாடு முடிந்த மறுநாள் கொடிய செய்தி ஒன்று காட்டுத் தீ போலப் பரவி வந்து மக்களின் நெஞ்சங்களில் பேரிடியாக விழுந்தது. அப்படியென்ன செய்தி, சமாதான மாநாடு முடிந்த மற்றநாள் 1957 செப்டம்பர் 11 -ம் நாள் இரவு, பரமக்குடியில் காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தான் அது. செப்டம்பர் 13 -ம் நாள் அருங்குளம் என்ற கிராமத்தில் நாடகம் பார்ப்பதில் கலகம் மூண்டது. இந்த இரு சம்பவங்களும் முதுகுளத்தூர் தொகுதிக்கு வெளியில் நடந்தவை. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பெரும் கலவரம் முதுகுளத்தூர் தொகுதியில் ஏற்படும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பர்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றம். இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட போஸ் உட்பட பெரிய போலிஸ் அதிகாரிகளைக் கலந்து பேசினார்.
தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய. அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், கல்நெஞ்சன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் ரே என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் ரே அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை கொடும்பாவி இன்ஸ்பெக்டர் ரே தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே! கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ ? என்று அறியாமல் கைகளும் கால்களும் கண்களும் கட்டப்பட்டிருந்த கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் …..துப்பாக்கியின் டுமீல் டுமீல் கத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே?இன்ஸ்பெக்டர் ரே, அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் டுமீல் டுமீல் என்று சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இனைஞர்கள் செய்த குற்றம் என்ன? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை ? தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக, ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்க்காகத் தான், அந்த ஐந்து இளைஞர்களையும் சுட்டுப் பொசுக்கினார்கள்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இனைஞர்களின் உடவ்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு போய், பிரேத சோதனை நடத்தி போலிசாரே எரித்து விட்டனர், இதுதான் என்றைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலையாகும்.
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.
போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, உத்தமத் தலைவராம் தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன. இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது. தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர்.
தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
_
அதையொட்டி இருதரப்பினரிடையே ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி, வேண்டாத விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்தில், ஜில்லா கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் ஒரு சமாதான மாநாட்டுக்கு ஏற்பா செய்தார். அந்த மாநாடு 1957 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி முதுகுளத்துhர் தாலுகா ஆபிசில் நடைபெற்றது.அந்த மாநாட்டில் தென் மண்டல போலிஸ் ஐ.ஜி. ராமநாதபுரம் ஜில்லா எஸ்.பி., டி. எஸ்.பி., ட்யூட்டி சூப்ரெண்ட், ஆ.டிஒ. ஆகியோர் அதிகாரிகள் தரப்பிலும், ஸ்ரீவில்லிபுத்துhர் பார்லிமெண்ட் உறுப்பினர் உ. முத்துராமலிங்கத்தேவர், சட்டசபை உறுப்பினர்கள் டி. எஸ். சசிவர்ணத் தேவர், சிவகங்கை டி. சுப்பிரமணிய ராஜா, அருப்புக்கோட்டை எம்.டி.ராமாசாமி, திருவாடனை கே.ஆர். எம். கரியமாணிக்கம், ஜில்லா போர்டு உறுப்பினர்கள் பா.ரா. நவசக்தி, டி. முத்துசாமித் தேவர் ஆகியோர் பார்வர்ட் பிளாக் கட்சி தரப்பிலும் -கமுதி பஞ்சாயத் போர்டு தலைவர் சௌந்திரபாண்டி நாடார், பேரையூர் வி.எம்.எஸ். வேலுசாமி நாடார், முதுகுளத்தூர் அருணகிரி, இராமநாதபுரம் சேதுபதி சகோதரர்கள் காசிநாத துரை, சிதம்பர நாத துரை ஆகியோர் காங்கிரஸ் கட்சி தரப்பிலும்,சாத்தையா, பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேல், பேரையூர் பீட்டர் ஆகியோர் அரிஜனத் தரப்பிலும் கலந்து கொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கேட்டும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் தலைமை வகித்தார். முதலில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களைத் தனி அறைக்கு அழைத்து, அவர்கள் கூறிய விளக்கங்களைக் கேட்டுக் கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளையும், அரிஜனப் பிரதிநிதிகளையும் அழைத்து விவரங்களைக் கேட்டார்.பின்னர் பொதுவான நிலையில் எல்லாத் தரப்பினர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டை ஆரம்பித்து வைக்க கலெக்டர் இ.வி.ஆர்.பணிக்கர் பேசியதாவது :" இந்தத் தாலுகாவில் இருதரப்பினரின் வேறுபாட்டால் நடந்து வரும் நிகழ்ச்சிகளை எல்லோரும் அறிவீர்கள்.
மறவர்கள், நாடார்கள், அரிஜனங்கள் இதர வகுப்பினர் அனைவரும் கடந்த கால சம்பவங்களை மறந்து, எல்லோரும் ஓரினம் என்ற மனோபாவங்கொண்டு ஐக்கியமாக வாழ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்."
"இந்த ஜில்லாவின் தலைமை அதிகாரி என்ற முறையில் இவ்வட்டாரத்தில் அமைதி நிலவச் செய்யவும், எல்லோரையும் வேறுபடின்றி வாழ்விக்கச் செய்யவும். எனக்குள்ள கடமையை உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறேன்." "எந்த வகுப்பாரும் சட்டத்திற்குப் புறம்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு, தங்கள் குறைகளைச் சட்டபர்வமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சட்டத்தையும் ஒழுங்கையும், மதித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜில்லா கலெக்டர் பேசி முடித்தார்.
பின்னர், உ. முத்துராமலிங்கத்தேவர் எம்.பி. பேசியதாவது : "இத்தாலுகாவின் மறவர்களுக்குச் சொந்தமான ஆடு, மாடு போன்ற உடைமைகள் ஆயிதங்களால் பயமுறுத்தி அபகரிக்கப்படுவதற்கு அரிஜனங்களைத் தூண்டி விட்டு உற்சாக மூட்டுவதற்கான முழுப்பொறுப்பும் காங்கிரசையே சேரும். மறவர்கள், யாதவர்கள், சேர்வைக்காரர்கள், நாயுடு இனத்தார் ஆகியோரை காங்கிரஸ்காரர்களால் தூண்டி விடப்பட்ட அரிஜனங்கள் பலவந்தமான முறையில் பெண்களை அலைகழிப்பது போன்ற பல இன்னல்களுக்கு இலக்காகி வருகிறார்கள். இச் செயல்களால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட மேற்குறித்த இன மக்கள், தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து பாதுகாப்பிற்காக, பக்கத்துக் கிராமங்களுக்கு, வீடு, வாசல், உடமைகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் அவர்களது விவசாயமும் கெட்டு, வாழ்க்கை நிலையும் சீரழிந்து விட்டது. இது போன்ற சட்டவிரோத செயல்களால், இதுவரை கிட்டதட்ட நுhறு குடும்பங்களுக்கு மேல் மிகவும் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கொடுமைகளுக்கு இலக்கானவர்கள் போலிசில் புகார் செய்தும் புண்ணியம் இல்லை. இதுவரை எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டதில் போலிஸ் தரப்பிலிருந்து எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை".
"அதற்குப் பதிலாக, காங்கிரசைச் சேர்ந்த அரிஜனங்கள், நாடார்கள் பக்கமே சாதகமாக இருந்து வருவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டத்தில் மற்றொரு சம்பவத்தை இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்." சமீபத்தில் பேரையூர் என்ற கிராமத்தில் வெடி விபத்துச் சம்பவம் ஒன்று நடைபெற்து. அதில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மூக்க நாடார் என்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகக் கூறி, அதன் உண்மை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. பயங்கரமான அந்த வெடி விபத்தில் செத்தது மூக்க நாடார் மட்டுமல்ல, மேலும் சிலர் செத்திருப்பதாகத் தெரிகிறது. அப்பயங்கர வெடிகள், அரசாங்க லைசென்ஸ் இன்றி தயாரிக்கப்பட்டவை. அத்தனையும் மூடி மறைக்கப்பட்டு விட்டது." ஆனால், இம்மாதிரி சம்பவத்தில் மறவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நடவடிக்கைகளை வேறு வழியில் திருப்பி, கடுமையாக்கி, பிரமாதமாக பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். கை வெடிகுண்டுகள் செய்வதில் தேர்ச்சி பெற்ற மூக்க நாடாரை, அருப்புக் கோட்டையில் இருந்து பேரையூருக்குக் கூட்டி வந்து, காங்கிரஸ் தரப்பினர் வெடிகள் தயாரிக்கச் செய்ததன் நோக்கம் பட்டவர்த்தனமானதாகும். இதோடு காங்கிரஸ் தரப்பினர்களில், ஒரு பாவமும் அறியாத அரிஜனங்கள் கலவரங்களுக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். இது தவிர, ராமநாதபுரம் ஜில்லா போலிசுக்குச் சொந்தமான மோட்டார் லாரி ஒன்றின் மூலம் மூங்கில் கம்புகளும் தடிகளும் கடலாடிக்கு அருகே உள்ள காவக்குளம் கிராமத்தில் உள்ள அரிஜனங்களுக்கும் காங்கிரஸ் தரப்பினர்களுக்கம் விநியேகிக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் அவர்களின் கவனத்திற்கும் போலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மேலும் பலவித ஆயுதங்களும் வேறு ஊர்களில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்கள் அரிஜனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதெல்லாம் அரசாங்க விநியோகம் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்களாம் இதனால், அரிஜனங்கள், காரணமின்றி மறவர்களை இழுத்துத் தாக்க வசதிப்படுகிறது. அதே சமயம் அரிஜனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற தெம்பு ஒரு தரப்பில் ஏற்படுகிறது." "காங்கிரஸ் தரப்பினர்களும், போலிஸ் தரப்பினரில் சிலரும் அரிஜன வாலிபர்களை ஏவி விட்டு, தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை என்ற அடிப்படையில், கிராமப் பொது கிணறுகளில் தண்ணீர் மொள்ளச் செல்லும் மறவர் குலப் பெண்கள் அவமானப்படும்படியான முறையில் செய்ய வைப்பதால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மறவர்கள் மிக மிக மனம் நொந்து சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்" என்று தேவர் கூறி முடித்தார்.
காங்கிரஸ் தரப்பு நாடார்கள் சார்பில், பேரையூர் வி.எம்.எஸ். வேலுக்காமி நாடார், "மறவர்கள், நாடார்களுக்கு எதிராகப் பொது நிதி திரட்டி வருகிறார்கள். நாடார் கடைக்ளில் சாமான்கள் வாங்க விடாமல், மறவர்களை மறியல் செயயச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறினார். இதை மறுத்து தேவர், "இந்தப் புகார் உண்மை அல்ல, குறிப்பிட்ட கிராம மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு இருக்கிறது. அவ்வழக்கை நடத்துவதற்காக அக்கிராம மக்கள் தங்களுக்குள் பொதுநிதி வசூலித்தார்கள். இது தவிர, நாடார் கடைகளில் சாமான் வாங்கக் கூடாது என்று மறவர்களால் கட்டுப்பாடு செய்யப்பட்டதாகவோ, மறியல் செய்யப்பட்டதாகவோ ஏதேனும் புகார் இருந்தால், உடனே அதை மாற்றுவதற்கான ஏற்பாட்டை நானே செய்து, அந்த மறியலைத் தடுக்கிறேன். ஏதேனும் அம்மாதிர் புகார் உண்டா? என்று கலெக்டர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று கூறினார்.
"அம்மாதிரி மறவர்கள் மீது எவ்விதப் புகாரும் இல்லை. நாடார்கள் தரப்பு புகாருக்கு ஆதரவான வகையில் ஒன்றும் பதிவாகவுமில்லை என்று கலெக்டர் கூறினார்.
பிறகு அரிஜன தரப்பில் கலந்து கொண்ட பேரையூர் பீட்டரும், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இமானுவேலுவும் பேசியதாவது :"அரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு எதிராக மறவர்கள் இயங்கி வருகிறர். இதர ஜாதி இந்துக்கள் மாதிரி அரிஜனங்கள் புது உடை தரித்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மறவர்கள் விரும்புவதில்லை என்று கூறினார்.
அவர்களின் கூற்றுக்குப் பதில் அளிக்கும் முறையில் தேவர் கூறியதாவது : அரிஜன முன்னேற்றத்தில் எல்லோரையும் விட அதிக அக்கறை கொண்டவன் நான். ஜாதி பேதத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்ட சிலரில் நான் முதன்மையானவன். ஜாதி, பேதத்தை ஒழிப்பதற்காக 1932-ஆம் ஆண்டில் ஒரு அரிஜனது வீட்டில் போய்ச் சாப்பிட்டேன். திரு. வேலுச்சாமி நாடார் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன் நாடார்களின் வீடுகளில் மறவர்கள் சாப்பிடுவதில்லை. என்னைத் தொடர்ந்து இந்த ஜாதி வேற்றுமை வேரற்றுப் போகட்டும் என்பதற்காகவே, நான் முதன் முதலில் நாடார் வீட்டிலும் அரிஜன் வீட்டிலும் சாப்பிட்டு வழிகாட்டினேன். மேலும், வித்தியாசம் மிகுந்திருந்த கமுதி போன்ற இடங்களில் உள்ள கோவில்களை, அரிஜனங்களுக்குத் திறந்து விடுவதில் நான் முன்னின்று பாடுபட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இது தவிர, காங்கிரஸ் மாதிரி பார்வர்ட் பிளாக் அரிஜன உயர்வுக்கத் தன்னை அர்பணித்துக் கொண்ட கட்சியாகும். உதாரணமாக, பார்வர்ட் பிளாக் சார்பில் நின்ற அரிஜன அபேட்சர்கருக்கு தான் அரிஜனங்களும் மறவர்களும் இதர இனத்தார்களும் பெருமளவு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தேர்தல்களில் இது நிதர்சனமாகி இருக்கிறது. இந்நிலையில் அரிஜன உயர்வுக்கு மறவர்கள் எதிர்ப்புப் புரிகிறார்கள் என்று குறை கூறுவது அழகல்ல" "மேலும், அரிஜன உயர்வு என்பது ஒரே இரவில் சாத்தியமானதல்ல. இருதரப்பிலும் நாளடைவில் பரஸ்பரம் மனமாற்றம் அடைய வேண்டும். தாழ்த்தப்பட்டோர் உயர்வு என்றால், மறவர், யாதவர், நாயுடு போன்ற ஜாதி இந்துக்களின் இளம் பெண்களிடம் விஷமம் புரிவதும் அல்ல. அம்மாதிரி எல்லாம் அரிஜனங்கள் மோசமான முறையில் தூண்டி விடப்படுவதால் தான் இந்த முறைகேடுகள் சம்பவிக்கப்படுகின்றன என்று கூறி முடித்தார் தேவர்.
கடைசியாக மாவட்ட கலெக்டர், கடந்த கால ஐக்கிய பேத உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் எல்லா தரப்பினருமே மறந்து, பொது விவகாரங்களில் ஒழுங்கையும் மதித்துக் கடைபிடித்து, இத்தாலுகாவில் அமைதியை நிலை நாட்டி, எல்லோரும் சுமூகமாக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வாழ வசதி செய்ய ஆவன செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.
(அரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகமும், பார்வர்ட் பிளாக் சட்ட மன்ற உறுப்பினர் எ.பெருமாளும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.)
பின்னர் கலெக்டர், எல்லாத் தரப்பு தலைவர்களும் ஒன்றுபட்டு, இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான கிராமங்களுக்குப் போய் பொதுக் கூட்டம் போட்டு, ஒரே மேடையில் பேசினால், இந்தத் தாலுகாவின் சுமுக நிலைமைக்கு மிகமிகப் பயன் உள்ளதாக இருக்கும். சமாதான மாநாடு வெற்றி பெற்றதாகவும் அமையும் என்று கூறினார். இந்த யோசனைக்கு தேவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், நாடார்கள் மறுத்து விட்டனர். முடிவில், இப்பிராந்தியத்தில் வாழும் எல்லா இன மக்களிடையே சமதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுத்த கலெப்டருக்கு நன்றி கூறினார். எல்லாரிடமும் ஐக்கியத்தை உண்டாக்கும் வகையில் அதிகாரிகளுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பதாய் தேவர் உறுதி கூறினார்.மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கலெக்டர். அனால், மாநாடு முடிந்த மறுநாளில் …..
கீழத்தூவல் படுகாலை சமாதான மாநாடு முடிந்த மறுநாள் கொடிய செய்தி ஒன்று காட்டுத் தீ போலப் பரவி வந்து மக்களின் நெஞ்சங்களில் பேரிடியாக விழுந்தது. அப்படியென்ன செய்தி, சமாதான மாநாடு முடிந்த மற்றநாள் 1957 செப்டம்பர் 11 -ம் நாள் இரவு, பரமக்குடியில் காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தான் அது. செப்டம்பர் 13 -ம் நாள் அருங்குளம் என்ற கிராமத்தில் நாடகம் பார்ப்பதில் கலகம் மூண்டது. இந்த இரு சம்பவங்களும் முதுகுளத்தூர் தொகுதிக்கு வெளியில் நடந்தவை. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பெரும் கலவரம் முதுகுளத்தூர் தொகுதியில் ஏற்படும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பர்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றம். இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட போஸ் உட்பட பெரிய போலிஸ் அதிகாரிகளைக் கலந்து பேசினார்.
தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய. அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், கல்நெஞ்சன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் ரே என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் ரே அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை கொடும்பாவி இன்ஸ்பெக்டர் ரே தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான். அங்கே! கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ ? என்று அறியாமல் கைகளும் கால்களும் கண்களும் கட்டப்பட்டிருந்த கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் …..துப்பாக்கியின் டுமீல் டுமீல் கத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே?இன்ஸ்பெக்டர் ரே, அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் டுமீல் டுமீல் என்று சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இனைஞர்கள் செய்த குற்றம் என்ன? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை ? தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக, ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்க்காகத் தான், அந்த ஐந்து இளைஞர்களையும் சுட்டுப் பொசுக்கினார்கள்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இனைஞர்களின் உடவ்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு போய், பிரேத சோதனை நடத்தி போலிசாரே எரித்து விட்டனர், இதுதான் என்றைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலையாகும்.
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.
போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, உத்தமத் தலைவராம் தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன. இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது. தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர்.
தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
_
1957 - முதுகுளத்தூர் கலவரம்--2
மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : -
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.
2. 17-4-1957-ல்அவர் சாயல்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, நெறிதவறிய வியாபாரத்தின் மூலம் நாடார்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். பொது மக்கள் யாரும் நாடார்களோடு எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது கடைகளில் சாமான்கள் வாங்குவதையும் நிறுத்தி விடுங்கள். கடந்த ஜூலை மாதக் கடைசியில் விருதுநகரில் ஒரு சதி உருவாகி இருக்கிறது. நாடார் இனத் தலைவர்கள் இரகசியமாகத் கூடி, அக் கூட்டத்தில் அரிஜனங்களின் ஒரு பகுதியினனைரைக் கூட்டிப் போய் அவர்களை மறவர்களோடு மோதும்படி போதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
3. 1957 ஆம் ஆண் ஜூன் 14-ல் அபிராமம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தவறான முறைகள் மூலம் எனக்கு எதிராகப் போலிஸ் எதுவும் செய்தால், போலிசார் செய்யும் முறைகளின் படியே அவர்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார்.
4. 1957 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 10ஆம் தேதி திருப்புவனம் புதூரில் நடந்த ஒரு பொக்கூட்டத்தில் பேசும் போது, எனது தொகுதியில் எனக்குச் செல்வாக்கு இல்லை என்று காட்டுவாற்காகக் காங்கிரஸ்காரர்கள் பொறுக்க முடியாத பல அக்கிரம வழிகளைக் கையாளுகிறார்கள். அந்த அக்கிரமங்கள் அளவுக்கு மீறி வருமானால், காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலே ஒரு மூன்றாவது உலகப்போரைத் தொடங்க நான் தயாராக நேரும் என்று பயமுறுத்திப் பேசினார்.
சமீபத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்குமிடையே வளர்ந்தோங்கி வரும் வகுப்பு வளர்ச்சிக்கு அவரின் நடவடிக்கைகளே பொறுப்புகள் என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:-
1. 1957 செப்டம்பர் 10-ல் இராமநாதபுரம் கலெக்டரால் முதுகுளத்தூரில் ஒரு சமாதான மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்கள் சார்பில் ஸ்ரீ இமானுவேல் பேசினார். தமக்குச் சமமாக இமானுவேல் என்பவர், அரிஜனங்களுக்காகப் பேசுவது கேவலம் என்ற முறையில் குறிப்பிட்ட தேவர், மாநாடு முடிந்து வெளியே வந்து, " இமானுவேலை இவ்வளவு முக்கியத்துவம் பெற எப்படி அனுமதித்தீர்கள்? " என்றும் எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் தம்மைப் பின்பற்றுவோரைப் பார்த்துக் கேட்டார்.
மறுநாள், அவரைப் பின்பற்றும் ஒரு பகுதி தேவர்களால் திரு இமானுவேல் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலை செய்தவர்களில் ஒருவர், கொலை செய்யும்போது, தேவரை எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்று கேட்டுக் கொண்டே கொன்றார்.
2. செப்டம்பர் 16-,ல வடக்கம்பட்டியில், ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திரு. தேவர், முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் வகுப்புக்கலவரம் மூளுவதற்கான உணர்ச்சிகள் வேகப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, காங்கிரஸ்காரர்கள் சண்டையிடுவதற்குத் தவறான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அப்பகுதி மக்கள் மாவீரம் கொண்டவர்கள். பிரிட்டன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவ்வாட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் எதிர்த்து நின்றவர்களென்றும், அப்பகுதி மக்கள் போலீசுக்கோ, விசேடப் போலீசுக்காங்கிரஸ்காரர்கள் , இராணுவத்திற்கோ பயப்படத் தேவையில்லை என்றும், நிலைமையை அடக்கப் பலாத்காரம் மூலமே சர்க்காருக்கு பதில் அளிக்கப்படும் என்றும், இந்த நாட்டில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மக்கள் ஆயுதம் ஏந்தத் தயங்க வேண்டாமென்றும், உள்நாட்டுப் போரை நடத்தும்படியும் பேசினார்.
3. செப்டம்பர் 16-ல் வடக்கம்பட்டியில், கொலை ஆயுதப் போராட்டம், வேல் கம்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பெருத்த அளவில் நடைபெற்றன.
முதுகுளத்தூர், பரமக்குடி, கிவகங்கை, அருப்புக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த கீழ்க்காணும் கிராமங்களில் நடந்த சம்பவங்கள் வருமாறு :-
1. செப்டம்பர் 17-ல் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, புத்தம்பல் கிராம அரிஜன வீடுகளுக்குத் தீயிட்டு விட்டு வீராம்பல் கிராமத்துக்கு அணி வகுத்துப் போய், அங்கே பாதுகாப்புக்காக இருந்த ஒரு எஸ்.ஏ. பி. போலிசைத் தாக்கியது. போலிசார் தற்காப்புத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மறவர்கள் இருவருக்குக் காயம். சிலர் மடிந்தனர். 72 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
2. செப்டம்பர் 18-ல் மாலை 4 மணி சுமாருக்கு, மறவர் கூட்டம் ஒன்று, தாத்தாக்குடி கிராமம் அரிஜனங்களின் வீடுகளுக்குத் தீயிட்டது.
3. செப்டம்பர் 19-ல் அருப்புக் கோட்டை தாலுhகா நரிக்குடி போலிஸ் சரகத்தை சேர்ந்த நாலுhர் கிராமத்தில் மறவர்கள், அஜனங்களின் வீடுகளுக்கத் தீ வைத்தனர்.
4. அன்று மாலை மார் 500 மறவர்கள் சிவகங்கைத் தாலுhகாவைச் சேர்ந்த திருப்பாச்சேத்தி அரிஜன வீடுகளுக்கத் தீயிட்டனர்.
5. அதே நாள் இரவு 10 மணி சுமாருக்கு, முன்னணிப் போலிசுப் படையினர், பெரும்பச்சேரி கிராம அரிஜன வீடுகள் எரிந்து கொண்டிருந்ததையும். 100 பேர் கொண்ட மறவர் கூட்டத்தால், அரிஜனங்கள் தாக்கப்படுவதையும் பார்த்து, தற்காப்புக்காக ஒன்பது ரவுண்டு சுட்டனர்.
6. அதே இரவு ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, நரிக்குடி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களில் தீயிடச் சென்ற செய்தி கிடைத்தது. கமுயீத போலிஸ் இன்ஸ்பெக்டர் உளுத்திமடை கிராமத்திற்குச் சென்று, ஆயுதஙகளைக் கீழே போடும்படி மறவர்களுக்குக் கட்டளையிட்டார். மறவர்கள் போலிசாரைத் தாக்கினர். போலிசார் கூட்டத்தில் நான்கு பேர் செத்தனர். பதினைது மறவர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
7. செப்டம்பர் 20-ல் காலை 6 மணிக்கு இளம்செம்பூரைச் சேர்ந்த கிட்டதட்ட 200 மறவர்கள் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் ஒரு மைல் தொலைவில் உள்ள வீராம்பல் கிராமத்திற்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீ வைத்து, அவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அரிஜனங்கள் அங்கு இருந்த மாதா கோவிலுக்குள் அடைக்கலம் புந்தனர். மறவர்கள் மாதா கோயில் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்து மூவரைக் கொன்று, முப்பத்தாறு பேர்களைக் காயப்படுத்தி விட்டனர்
8. அதே நாள் 500 பேர் கொண்ட மறவர் கூட்டம் ஒன்று, திருப்பாச்சேத்தி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீயிட்டு, உணவுப் பொருள்களையும், இதர பொருள்களையும் கொள்ளையிட்டனர். மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசேஷப் போலீஸ் படையுடனும் சென்று, மறவர்களை மழவராயனேந்தலில் சந்தித்து, ஆயுதங்களைக் கீழே போடும்படி உத்தரவிட்டனர். கட்டுப்பட மறுத்த மறவர்கள் போலீசைத் தாக்க முனைந்தபோது, போலீசார் ஆறு ரவுண்டு சுட்டனர். அதன் பயனாய் ஒரு மறவர் சூடுபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து விட்டார்.
9. இம்மாதிரி குற்றச் செயல்களால், முதுகுளத்தூர் போலீசார் அடுத்துள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் பலரைச் சந்தேகத்தின் பேரில் பல குற்றங்களுக்காகவும், சட்ட ஒழுங்கைக் காப்பதற்காகவும், கைது செய்தனர்.
இவைகளை அறிந்த திரு.தேவர், தமிழ்நாடு பத்திரிகை பிரதிநிதிகளிடம், தேவமார்களைக் கைது செய்து, குறிப்பாக எனது சொந்தக் கிராமமான பசும்பொன்னில் எனது சொந்த வீட்டிலிருந்த சமையல்காரனையும் உறவினர்களையும் கூடக் கைது செய்வதின் மூலம் சர்க்கார் என்னைச் சண்டைக்கு இழுக்கிறது' என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதில், அவர் சவாலை ஏற்கத் தயாராகும் எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது.
10. கீழ்த்தூவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் எஸ்.வெங்கடராமன் ஐ.சி.எஸ். விசாரணை நடத்தினார். இவ்விசாரணையைத் தாமோ, தமது கட்சியோ ஏற்கப் போவதில்லை என்று திரு தேவர் வாய்மொழியாகக் கூறியிருந்தும், விசாரணை நடந்த கட்டிடத்தின் வாயிலருகே ஒரு காரில் விசாரணையின்போது உட்கார்ந்திருந்தார். இதனால் அரிஜனங்கள் தைரியமாக கமிஷனிடம் வந்து தேவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க இயலாமல் போனது சாத்தியமாயிற்று. முதுகுளத்தூர் தாலுகாவிலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள மறவர்கள் திரு தேவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது கண்கூடு, மேலும் இவ்வித சம்பவங்களிலிருந்து, திரு தேவர் தமது ஜனங்களைப் பலாத்கார நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்குப் பதிலாக பின்னணியில் இருந்து கொண்டு அரிஜனங்களுக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது தெரிகிறது.
உ. முத்துராமலிங்கத் தேவர் தமது பகிரங்கப் பேச்சுக்களின் மூலமும், தம்மைப் பின்பற்றுவோருடன் இரகசிய ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், வகுப்புணர்ச்சியைக் கிளறிவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. இதை இப்படியே தொடரவிட்டால், மேலும் பல வகுப்புக் கலவரங்கள் சட்ட விரோத செயல்களுக்கும் அவர் தமது சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடும். அந்த நிலைமை ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பாதகமாக முடியும் என்பதால், அவர் தடுப்புக் காவல் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, திரு தேவர் எழுத்து மூலம் விவரிக்க உரிமையுண்டு. அவ்வாறு அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அவர் விரும்பினால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்னை சிறை சூப்பிரண்டட் மூலம் சென்னை சர்க்கார் காரியதரிசியிடம் அனுமதி கோரலாம். திரு. தேவர் மூலம் அனுப்பப்படும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் சர்க்கார் உடனே அட்வைசரி போர்டு முன் வைக்கும். அட்வைசரி போர்டு முன் நேரடியாக வந்து விபரம் சொல்ல திரு. தேவர் விரும்பினால், அதன்படியும் செய்யலாம். தாம் அட்வைசரி போர்டு முன் ஆஜராகி, விளக்கமளிக்கத் தேவர் நிச்சயித்திருந்தால், அரசாங்கத்தின் தலைமைக் காரியதரிசிக்கு முன்கூட்டியே எழுதும்படி திரு தேவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
_
உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்
1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.
2. 17-4-1957-ல்அவர் சாயல்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, நெறிதவறிய வியாபாரத்தின் மூலம் நாடார்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். பொது மக்கள் யாரும் நாடார்களோடு எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது கடைகளில் சாமான்கள் வாங்குவதையும் நிறுத்தி விடுங்கள். கடந்த ஜூலை மாதக் கடைசியில் விருதுநகரில் ஒரு சதி உருவாகி இருக்கிறது. நாடார் இனத் தலைவர்கள் இரகசியமாகத் கூடி, அக் கூட்டத்தில் அரிஜனங்களின் ஒரு பகுதியினனைரைக் கூட்டிப் போய் அவர்களை மறவர்களோடு மோதும்படி போதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
3. 1957 ஆம் ஆண் ஜூன் 14-ல் அபிராமம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தவறான முறைகள் மூலம் எனக்கு எதிராகப் போலிஸ் எதுவும் செய்தால், போலிசார் செய்யும் முறைகளின் படியே அவர்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார்.
4. 1957 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 10ஆம் தேதி திருப்புவனம் புதூரில் நடந்த ஒரு பொக்கூட்டத்தில் பேசும் போது, எனது தொகுதியில் எனக்குச் செல்வாக்கு இல்லை என்று காட்டுவாற்காகக் காங்கிரஸ்காரர்கள் பொறுக்க முடியாத பல அக்கிரம வழிகளைக் கையாளுகிறார்கள். அந்த அக்கிரமங்கள் அளவுக்கு மீறி வருமானால், காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலே ஒரு மூன்றாவது உலகப்போரைத் தொடங்க நான் தயாராக நேரும் என்று பயமுறுத்திப் பேசினார்.
சமீபத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்குமிடையே வளர்ந்தோங்கி வரும் வகுப்பு வளர்ச்சிக்கு அவரின் நடவடிக்கைகளே பொறுப்புகள் என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:-
1. 1957 செப்டம்பர் 10-ல் இராமநாதபுரம் கலெக்டரால் முதுகுளத்தூரில் ஒரு சமாதான மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்கள் சார்பில் ஸ்ரீ இமானுவேல் பேசினார். தமக்குச் சமமாக இமானுவேல் என்பவர், அரிஜனங்களுக்காகப் பேசுவது கேவலம் என்ற முறையில் குறிப்பிட்ட தேவர், மாநாடு முடிந்து வெளியே வந்து, " இமானுவேலை இவ்வளவு முக்கியத்துவம் பெற எப்படி அனுமதித்தீர்கள்? " என்றும் எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் தம்மைப் பின்பற்றுவோரைப் பார்த்துக் கேட்டார்.
மறுநாள், அவரைப் பின்பற்றும் ஒரு பகுதி தேவர்களால் திரு இமானுவேல் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலை செய்தவர்களில் ஒருவர், கொலை செய்யும்போது, தேவரை எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்று கேட்டுக் கொண்டே கொன்றார்.
2. செப்டம்பர் 16-,ல வடக்கம்பட்டியில், ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திரு. தேவர், முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் வகுப்புக்கலவரம் மூளுவதற்கான உணர்ச்சிகள் வேகப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, காங்கிரஸ்காரர்கள் சண்டையிடுவதற்குத் தவறான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அப்பகுதி மக்கள் மாவீரம் கொண்டவர்கள். பிரிட்டன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவ்வாட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் எதிர்த்து நின்றவர்களென்றும், அப்பகுதி மக்கள் போலீசுக்கோ, விசேடப் போலீசுக்காங்கிரஸ்காரர்கள் , இராணுவத்திற்கோ பயப்படத் தேவையில்லை என்றும், நிலைமையை அடக்கப் பலாத்காரம் மூலமே சர்க்காருக்கு பதில் அளிக்கப்படும் என்றும், இந்த நாட்டில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மக்கள் ஆயுதம் ஏந்தத் தயங்க வேண்டாமென்றும், உள்நாட்டுப் போரை நடத்தும்படியும் பேசினார்.
3. செப்டம்பர் 16-ல் வடக்கம்பட்டியில், கொலை ஆயுதப் போராட்டம், வேல் கம்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பெருத்த அளவில் நடைபெற்றன.
முதுகுளத்தூர், பரமக்குடி, கிவகங்கை, அருப்புக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த கீழ்க்காணும் கிராமங்களில் நடந்த சம்பவங்கள் வருமாறு :-
1. செப்டம்பர் 17-ல் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, புத்தம்பல் கிராம அரிஜன வீடுகளுக்குத் தீயிட்டு விட்டு வீராம்பல் கிராமத்துக்கு அணி வகுத்துப் போய், அங்கே பாதுகாப்புக்காக இருந்த ஒரு எஸ்.ஏ. பி. போலிசைத் தாக்கியது. போலிசார் தற்காப்புத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மறவர்கள் இருவருக்குக் காயம். சிலர் மடிந்தனர். 72 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
2. செப்டம்பர் 18-ல் மாலை 4 மணி சுமாருக்கு, மறவர் கூட்டம் ஒன்று, தாத்தாக்குடி கிராமம் அரிஜனங்களின் வீடுகளுக்குத் தீயிட்டது.
3. செப்டம்பர் 19-ல் அருப்புக் கோட்டை தாலுhகா நரிக்குடி போலிஸ் சரகத்தை சேர்ந்த நாலுhர் கிராமத்தில் மறவர்கள், அஜனங்களின் வீடுகளுக்கத் தீ வைத்தனர்.
4. அன்று மாலை மார் 500 மறவர்கள் சிவகங்கைத் தாலுhகாவைச் சேர்ந்த திருப்பாச்சேத்தி அரிஜன வீடுகளுக்கத் தீயிட்டனர்.
5. அதே நாள் இரவு 10 மணி சுமாருக்கு, முன்னணிப் போலிசுப் படையினர், பெரும்பச்சேரி கிராம அரிஜன வீடுகள் எரிந்து கொண்டிருந்ததையும். 100 பேர் கொண்ட மறவர் கூட்டத்தால், அரிஜனங்கள் தாக்கப்படுவதையும் பார்த்து, தற்காப்புக்காக ஒன்பது ரவுண்டு சுட்டனர்.
6. அதே இரவு ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, நரிக்குடி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களில் தீயிடச் சென்ற செய்தி கிடைத்தது. கமுயீத போலிஸ் இன்ஸ்பெக்டர் உளுத்திமடை கிராமத்திற்குச் சென்று, ஆயுதஙகளைக் கீழே போடும்படி மறவர்களுக்குக் கட்டளையிட்டார். மறவர்கள் போலிசாரைத் தாக்கினர். போலிசார் கூட்டத்தில் நான்கு பேர் செத்தனர். பதினைது மறவர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
7. செப்டம்பர் 20-ல் காலை 6 மணிக்கு இளம்செம்பூரைச் சேர்ந்த கிட்டதட்ட 200 மறவர்கள் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் ஒரு மைல் தொலைவில் உள்ள வீராம்பல் கிராமத்திற்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீ வைத்து, அவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அரிஜனங்கள் அங்கு இருந்த மாதா கோவிலுக்குள் அடைக்கலம் புந்தனர். மறவர்கள் மாதா கோயில் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்து மூவரைக் கொன்று, முப்பத்தாறு பேர்களைக் காயப்படுத்தி விட்டனர்
8. அதே நாள் 500 பேர் கொண்ட மறவர் கூட்டம் ஒன்று, திருப்பாச்சேத்தி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீயிட்டு, உணவுப் பொருள்களையும், இதர பொருள்களையும் கொள்ளையிட்டனர். மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசேஷப் போலீஸ் படையுடனும் சென்று, மறவர்களை மழவராயனேந்தலில் சந்தித்து, ஆயுதங்களைக் கீழே போடும்படி உத்தரவிட்டனர். கட்டுப்பட மறுத்த மறவர்கள் போலீசைத் தாக்க முனைந்தபோது, போலீசார் ஆறு ரவுண்டு சுட்டனர். அதன் பயனாய் ஒரு மறவர் சூடுபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து விட்டார்.
9. இம்மாதிரி குற்றச் செயல்களால், முதுகுளத்தூர் போலீசார் அடுத்துள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் பலரைச் சந்தேகத்தின் பேரில் பல குற்றங்களுக்காகவும், சட்ட ஒழுங்கைக் காப்பதற்காகவும், கைது செய்தனர்.
இவைகளை அறிந்த திரு.தேவர், தமிழ்நாடு பத்திரிகை பிரதிநிதிகளிடம், தேவமார்களைக் கைது செய்து, குறிப்பாக எனது சொந்தக் கிராமமான பசும்பொன்னில் எனது சொந்த வீட்டிலிருந்த சமையல்காரனையும் உறவினர்களையும் கூடக் கைது செய்வதின் மூலம் சர்க்கார் என்னைச் சண்டைக்கு இழுக்கிறது' என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதில், அவர் சவாலை ஏற்கத் தயாராகும் எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது.
10. கீழ்த்தூவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் எஸ்.வெங்கடராமன் ஐ.சி.எஸ். விசாரணை நடத்தினார். இவ்விசாரணையைத் தாமோ, தமது கட்சியோ ஏற்கப் போவதில்லை என்று திரு தேவர் வாய்மொழியாகக் கூறியிருந்தும், விசாரணை நடந்த கட்டிடத்தின் வாயிலருகே ஒரு காரில் விசாரணையின்போது உட்கார்ந்திருந்தார். இதனால் அரிஜனங்கள் தைரியமாக கமிஷனிடம் வந்து தேவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க இயலாமல் போனது சாத்தியமாயிற்று. முதுகுளத்தூர் தாலுகாவிலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள மறவர்கள் திரு தேவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது கண்கூடு, மேலும் இவ்வித சம்பவங்களிலிருந்து, திரு தேவர் தமது ஜனங்களைப் பலாத்கார நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்குப் பதிலாக பின்னணியில் இருந்து கொண்டு அரிஜனங்களுக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது தெரிகிறது.
உ. முத்துராமலிங்கத் தேவர் தமது பகிரங்கப் பேச்சுக்களின் மூலமும், தம்மைப் பின்பற்றுவோருடன் இரகசிய ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், வகுப்புணர்ச்சியைக் கிளறிவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. இதை இப்படியே தொடரவிட்டால், மேலும் பல வகுப்புக் கலவரங்கள் சட்ட விரோத செயல்களுக்கும் அவர் தமது சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடும். அந்த நிலைமை ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பாதகமாக முடியும் என்பதால், அவர் தடுப்புக் காவல் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, திரு தேவர் எழுத்து மூலம் விவரிக்க உரிமையுண்டு. அவ்வாறு அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அவர் விரும்பினால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்னை சிறை சூப்பிரண்டட் மூலம் சென்னை சர்க்கார் காரியதரிசியிடம் அனுமதி கோரலாம். திரு. தேவர் மூலம் அனுப்பப்படும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் சர்க்கார் உடனே அட்வைசரி போர்டு முன் வைக்கும். அட்வைசரி போர்டு முன் நேரடியாக வந்து விபரம் சொல்ல திரு. தேவர் விரும்பினால், அதன்படியும் செய்யலாம். தாம் அட்வைசரி போர்டு முன் ஆஜராகி, விளக்கமளிக்கத் தேவர் நிச்சயித்திருந்தால், அரசாங்கத்தின் தலைமைக் காரியதரிசிக்கு முன்கூட்டியே எழுதும்படி திரு தேவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
_
1957 - முதுகுளத்தூர் கலவரம்--3
சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.
நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.
அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்". என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.
முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'இந்து' பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். 'இந்து' நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.
மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். "எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்" எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்" என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.
12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, "எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது" என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து "நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்" என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.
செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.
இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.
திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு
, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.
அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.
கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.
என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.
நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.
மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.
ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.
அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.
மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.
1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.
3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.
4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.
அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.
செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?
வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. "கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது" என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.
தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.
நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், "பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.
சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.
நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.
பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.
என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்". என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை
நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.
அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்". என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.
முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'இந்து' பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். 'இந்து' நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.
மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். "எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்" எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்" என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.
12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, "எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது" என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து "நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்" என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.
செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.
இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.
திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு
, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.
அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.
கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.
என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.
நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.
மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.
ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.
அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.
மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.
1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.
3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.
4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.
அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.
செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?
வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. "கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது" என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.
தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.
நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், "பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.
சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.
நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.
பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.
என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்". என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை
பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.
தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.
1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?
சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.
"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.
'தேவர் விடுதலை' என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.
விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.
பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. "பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் பாராளுமன்றத்தை ஈர்த்தது"
.
No comments:
Post a Comment