இன்று 31.05.2019 பாஞ்சை தளபதி பகதூர் வெள்ளையத்தேவரின் 250 வது பிறந்தநாள் விழா..
இரண்டாம் ஆண்டாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது...
மாவீரர் வெள்ளையத்தேவன் :
அடலேறு மங்கலத்தேவரின் ஒரே மகன் நம் முக்குல மாவீரர் வெள்ளையத்தேவன். ஒப்பற்ற வீரமும் தீரமும் உள்ளவர். சிலம்பாட்டம்,மல்யுத்தம்,வாள்வீச்சு ,வேல்வீச்சு ,குதிரை யேற்றம், யானை யேற்றம், வளரி வீசுதல் ,கவன் எறிதல் போற்ற கலைகளில் வல்லவர். நாட்டு மக்கள் அனைவரும் போற்றும் பேரும் புகழும் பெற்றவர்.வீரத்தின் இலக்கணம் ,விவேகத்தின் மறுப்பிறப்பு.அவர் கூறிய கொம்புகளுடன் சீறிப்பாயும் முரட்டுக்காளையை அடக்குவதிலே வல்லவர்.
வெள்ளையத்தேவரின் பதினெட்டாம் வயதில் சாயல்குடியில் சீமை மறவன் திடலில் நடந்த மஞ்சுவிரட்டில் யாருமே அடக்கு முடியாத சீனிக்காளையை அடக்கினார். பிறகு ஒருநாள் இரவு தூக்கம் களைந்ததால் ஊரின் வயல்வெலியொரம் நடந்து செல்லும்போது ஏறத்தாழ முப்பது திருடர்கள் காவல்க்காரர்களை கட்டிப்போட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை திருடிக்கொண்டு செல்லும்போது ஆட்டுப்பட்டியின் வாயிலை அடைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தன் வேல்க்கம்பை சுழற்றினார். சிறிது நேரம் கடும் சண்டை. முடிவில் தனி ஒருவராக திருடர்களை தாக்கி கைக்கால்களை கட்டி ஆட்டுப்பட்டியின் வாயிலில் படுக்கவைத்திருந்தார். காலையில் இளவரசரின் வீரத்தை கண்டு நாட்டு மக்கள் நன்றி சொல்லி பாராட்டினர்.
சொக்கி என்ற சுந்தரவள்ளி.
பார்வையிலையே எதிரியை கொல்லும் வீர நாச்சியார். முதல்நாள் இரவில் முளைப்பாரி திருவிழாவில் மானோ மயிலோ என்று துள்ளிக்குதித்து தன் தோழிகளுடன் ஆடினாள் சொக்கி. அவ்விளம் நங்கையருக்கு பதிலடி தரும்படி எதிரணியில் ஆடிய இளங்காளை வெள்ளையத்தேவனின் வசீகர தோற்றத்தில் மயங்கி காதல்க்கொண்டு அவரின் நினைவிலையே அன்ன நடை நடந்து குளத்தில் தண்ணீர் மொண்டு எடுக்கும்போது தவறி விழுந்து கத்தினால். அவ்வழியே வந்த வெள்ளையத்தேவன் அந்த சத்தத்தை கேட்டு அவ்விடத்திற்கு வருமுன்னே வேங்கை ஒன்று வந்து சொக்கி என்ற வெள்ளையம்மாளை தாக்க முயன்றது .
வேங்கையின் வேகத்தை விட பாய்ந்துவந்து வெள்ளையத்தேவன் அதனை தாக்கினார். அவரின் பிடியில் வேங்கை மாட்டிக்கொண்டது. தன் இரும்புக்கரத்தால் வேங்கையை அடித்து தன் இடுப்பில் இருந்த கட்டாரியால் தாக்கி வேங்கையை கொன்றார்.
இதனைக்கண்ட சொக்கி மயங்கி தண்ணீரில் விழும் காட்சியை கண்டு அவளை காப்பாற்றினார் வெள்ளையத்தேவன். வேங்கையால் ஏற்ப்பட்டதன் உடலில் இருக்கும் காயத்தை பொருட்படுத்தாமல் சொக்கியை தன் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊருக்குள் நடந்துவந்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க சென்ற சொக்கியை வெகுநேரம் ஆகியும் காணும் என்பதால் அவளின் அப்பா இராமையா தேவர் ,தாத்தா அருனாச்சலத்தேவர் எதிரே வந்தனர். பிறகு வைத்தியப்பெண்களால் முதலுதவி செய்யப்பட்டு சொக்கி மயக்கம் தெளிந்தாள் சொக்கி , ஊரே திரண்டு இருந்தது.
அனைவரும் வெள்ளையத்தேவனை மாலைமரியாதை செய்து பாராட்டினார்கள் .
இந்த நேரத்தில் வெள்ளையத்தேவரை அரண்மனைக்கு அழைத்துவர கட்டபொம்மன் தூது அனுப்புகிறார். வெள்ளையத்தேவருடன் வெள்ளையம்மாளின் அப்பா இராமையாத்தேவரும் செல்கிறார். உடம்பில் காயங்களுடன் வரும் வெள்ளையத்தேவரை கண்டு கட்டபொம்மன் துடித்துப்போகிறார்.
நடந்த சம்பவத்தை அரசபையில் இராமையாத்தேவர் விளக்குகிறார். வீரத்தளபதி வெள்ளையத்தேவர் வாழ்க என்று கட்டபொம்மனே கோஷமிடுகிறார்.. அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் இராமையாத்தேவர் " வெள்ளையத்தேவர் வெள்ளையம்மாள் " திருமணத்தை அறிவிக்கிறார். கட்டபொம்மன் முன்னிலையில் மங்கலத்தேவரின் அரண்மனையில் வெள்ளையத்தேவனின் திருமணம் சீரும் சிறப்புமாக நாடே வியக்கும்வண்ணம் நடைபெறுகிறது..
இரண்டாம் ஆண்டாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது...
மாவீரர் வெள்ளையத்தேவன் :
அடலேறு மங்கலத்தேவரின் ஒரே மகன் நம் முக்குல மாவீரர் வெள்ளையத்தேவன். ஒப்பற்ற வீரமும் தீரமும் உள்ளவர். சிலம்பாட்டம்,மல்யுத்தம்,வாள்வீச்சு ,வேல்வீச்சு ,குதிரை யேற்றம், யானை யேற்றம், வளரி வீசுதல் ,கவன் எறிதல் போற்ற கலைகளில் வல்லவர். நாட்டு மக்கள் அனைவரும் போற்றும் பேரும் புகழும் பெற்றவர்.வீரத்தின் இலக்கணம் ,விவேகத்தின் மறுப்பிறப்பு.அவர் கூறிய கொம்புகளுடன் சீறிப்பாயும் முரட்டுக்காளையை அடக்குவதிலே வல்லவர்.
வெள்ளையத்தேவரின் பதினெட்டாம் வயதில் சாயல்குடியில் சீமை மறவன் திடலில் நடந்த மஞ்சுவிரட்டில் யாருமே அடக்கு முடியாத சீனிக்காளையை அடக்கினார். பிறகு ஒருநாள் இரவு தூக்கம் களைந்ததால் ஊரின் வயல்வெலியொரம் நடந்து செல்லும்போது ஏறத்தாழ முப்பது திருடர்கள் காவல்க்காரர்களை கட்டிப்போட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை திருடிக்கொண்டு செல்லும்போது ஆட்டுப்பட்டியின் வாயிலை அடைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தன் வேல்க்கம்பை சுழற்றினார். சிறிது நேரம் கடும் சண்டை. முடிவில் தனி ஒருவராக திருடர்களை தாக்கி கைக்கால்களை கட்டி ஆட்டுப்பட்டியின் வாயிலில் படுக்கவைத்திருந்தார். காலையில் இளவரசரின் வீரத்தை கண்டு நாட்டு மக்கள் நன்றி சொல்லி பாராட்டினர்.
சொக்கி என்ற சுந்தரவள்ளி.
பார்வையிலையே எதிரியை கொல்லும் வீர நாச்சியார். முதல்நாள் இரவில் முளைப்பாரி திருவிழாவில் மானோ மயிலோ என்று துள்ளிக்குதித்து தன் தோழிகளுடன் ஆடினாள் சொக்கி. அவ்விளம் நங்கையருக்கு பதிலடி தரும்படி எதிரணியில் ஆடிய இளங்காளை வெள்ளையத்தேவனின் வசீகர தோற்றத்தில் மயங்கி காதல்க்கொண்டு அவரின் நினைவிலையே அன்ன நடை நடந்து குளத்தில் தண்ணீர் மொண்டு எடுக்கும்போது தவறி விழுந்து கத்தினால். அவ்வழியே வந்த வெள்ளையத்தேவன் அந்த சத்தத்தை கேட்டு அவ்விடத்திற்கு வருமுன்னே வேங்கை ஒன்று வந்து சொக்கி என்ற வெள்ளையம்மாளை தாக்க முயன்றது .
வேங்கையின் வேகத்தை விட பாய்ந்துவந்து வெள்ளையத்தேவன் அதனை தாக்கினார். அவரின் பிடியில் வேங்கை மாட்டிக்கொண்டது. தன் இரும்புக்கரத்தால் வேங்கையை அடித்து தன் இடுப்பில் இருந்த கட்டாரியால் தாக்கி வேங்கையை கொன்றார்.
இதனைக்கண்ட சொக்கி மயங்கி தண்ணீரில் விழும் காட்சியை கண்டு அவளை காப்பாற்றினார் வெள்ளையத்தேவன். வேங்கையால் ஏற்ப்பட்டதன் உடலில் இருக்கும் காயத்தை பொருட்படுத்தாமல் சொக்கியை தன் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊருக்குள் நடந்துவந்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க சென்ற சொக்கியை வெகுநேரம் ஆகியும் காணும் என்பதால் அவளின் அப்பா இராமையா தேவர் ,தாத்தா அருனாச்சலத்தேவர் எதிரே வந்தனர். பிறகு வைத்தியப்பெண்களால் முதலுதவி செய்யப்பட்டு சொக்கி மயக்கம் தெளிந்தாள் சொக்கி , ஊரே திரண்டு இருந்தது.
அனைவரும் வெள்ளையத்தேவனை மாலைமரியாதை செய்து பாராட்டினார்கள் .
இந்த நேரத்தில் வெள்ளையத்தேவரை அரண்மனைக்கு அழைத்துவர கட்டபொம்மன் தூது அனுப்புகிறார். வெள்ளையத்தேவருடன் வெள்ளையம்மாளின் அப்பா இராமையாத்தேவரும் செல்கிறார். உடம்பில் காயங்களுடன் வரும் வெள்ளையத்தேவரை கண்டு கட்டபொம்மன் துடித்துப்போகிறார்.
நடந்த சம்பவத்தை அரசபையில் இராமையாத்தேவர் விளக்குகிறார். வீரத்தளபதி வெள்ளையத்தேவர் வாழ்க என்று கட்டபொம்மனே கோஷமிடுகிறார்.. அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் இராமையாத்தேவர் " வெள்ளையத்தேவர் வெள்ளையம்மாள் " திருமணத்தை அறிவிக்கிறார். கட்டபொம்மன் முன்னிலையில் மங்கலத்தேவரின் அரண்மனையில் வெள்ளையத்தேவனின் திருமணம் சீரும் சிறப்புமாக நாடே வியக்கும்வண்ணம் நடைபெறுகிறது..