DNT மறவர் மக்களின் அவல நிலைகள்
CT Act (கைரேகை சட்டம்)
இன்று குற்றம் செய்யும் தனிநபர்கள் கோர்ட் உத்தரவுப் படி நிபந்தனை ஜாமினில் அல்லது 30நாட்கள் ஒரே ஊரில் கோர்ட்டில் கையெழுத்திடுவது போல் அன்று 1911ம் ஆண்டு எந்த ஒரு குற்றமும் செய்யாமல் ஒட்டுமொத்த மறவர்(DNT) சாதி மக்களும் அவர்கள் வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல முடியாமால் 36 ஆண்டுகள் கிராம முன்சீப்(போலிஸ்) கண்காணிப்பில் வாழ்ந்து வந்தோம். மீறினால் சிறையில் அடைக்கப்படுவோம். சில கிராம மறவர்கள் போலிஸ் ஸ்டேஷனில் இரவு 11 மணிக்கும் காலை 4 மணிக்கும் கையெழுத்துப் போடும் கொடுமையும் இருந்தது. ஏகப்பட்ட மறவர்கள் மூணாறு, இலங்கை, பர்மா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு அடிமைகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுசெல்லப்பட்டனர். போலிசுக்குப் பயந்து தப்பிச்சென்ற காடு, மேடுகளில் மற்ற மாவட்டங்களில் மறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த மறவர் மக்களுக்கு இன்றுவரை சொந்த மாவட்டம் இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் பெயரைத் தவிர வேறு விவரம் தெரியாமல் மற்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தக் கடுமையான சட்டத்திற்கு பெயர்தான் CT Act (கைரேகை சட்டம்) என்ற குற்றப்பரம்பரைச் சட்டம். இந்த சட்டம் தேவரின் கடும் முயற்சியால் தமிழ்நாட்டில் மட்டும் சுதந்திரத்திற்கு முன் 1947ல் ஜூன் மாதம் நீக்கப்பட்டது.
இந்த கொடுமையான சட்டத்தால் பாதிக்கப்பட்ட மறவர் மக்களுக்காக 1942ம் ஆண்டு ஆங்கிலேய அரசு "மறவர் சீர்திருத்தத் திட்டம்" என்ற திட்டதின் மூலம் கட்டாயக்கல்வி, வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை, உழுவதற்கு இலவச நிலம், நிதி உதவிக்கு தனி சொசைட்டி போன்ற உதவிகளைக் கொடுக்க முயற்சித்தது. நிதிப் பற்றாக்குறையால் திட்டம் கைவிடப்பட்டது. இப்படித்தான் முதன்முறையாக மறவர் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
சுதந்திரத்திற்குப் பின் 1952ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த அய்யங்கார் கமிசன் பரிந்துரைப்படி வட இந்தியாவில் சில மாநிலங்களில் DNT மக்களுக்கு மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கிடைத்தன. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆங்கிலேய ஆட்சியில் அனுபவித்து வந்த ஒருசில சாதிகளுக்கு மட்டும் தமிழக அரசு மீண்டும் கொடுத்தது. இதுவரை ஒரு சலுகையும் அனுபவிக்காத மறவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
மாறாக HOA பழக்கவழக்க குற்றவாளிகள் என்ற சட்டத்தை நம்மீது திணித்தார்கள். அந்த சட்டம் இன்றுவரை தொடர்கிறது. குற்றப் பரம்பரை என்ற பெயரை சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என மாற்றினர்.குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழுகின்ற மறவர்களுக்கு DNT என்றும் ஏற்கனவே CT Actல் பாதிக்கப்பட்டுத் தப்பிச் சென்ற மற்ற மாவட்டங்களில் வாழும் மறவர்களுக்கு BC எனவும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் கல்லூரியில் படிக்கும் DNT மறவர்களுக்கு மட்டும் தமிழக அரசு இலவச உயர்கல்வி அளித்தது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதைப்பற்றி நம் மக்களுக்கு( மறவர்) சரிவர தெரியவில்லை. அதுவும் ஏறக்குறைய ஏமாந்த நிலைதான்.
1970ல் தமிழக அரசு அமைத்த "சட்டநாதன் கமிசன்" பரிந்துரையில் "மறவர் சீர்திருத்தத் திட்டம்" அமைத்து மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கொடுக்க பரிந்துரை செய்தும் தமிழக அரசு மறவர் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் கொடுக்கவில்லை. மூன்றாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
1979ல் தமிழக அரசு, மத்திய அரசு கூறியது என்ற பொய்யான காரணத்தைக் கூறி DNCயாக மாற்றியதால் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் பறிபோனது. நான்காவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
1989ல் MBCக்கு இணையாக DNCயை கருதி ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு தமிழக அரசு வேலைவாய்ப்புக்காகக் கொடுத்தது. இந்த MBC சலுகையை அனைத்து DNC சாதிகளும் தமிழகமெங்கும் அனுபவிக்கிறது. ஆனால் மறவர்கள் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட மாவட்ட மறவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முதலில் நமக்கு பயனுள்ள திட்டமாக தெரிந்தாலும் அரணியல், அரசாங்க அதிகாரிகள், நல்ல கல்லூரி உடைய வன்னியர் போன்ற பெரிய சாதிகளோடு போட்டி போட முடியாமல் அரசு உத்தியோகங்களில் நமது மறவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதுவும் ஏறக்குறைய ஏமாற்று வேலைதான்.
2007ல் தமிழக அரசு DNC மக்களுக்காக "சீர்மரபினர் நலவாரியம்" என்ற திட்டம் ஆரம்பித்தது. இதில் நிறைய சலுகைகள் உள்ளன. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாததால் தமிழகம் முழுவதும் இன்றுவரை மறவர்கள் 500 பேர்கூட இதில் உறுப்பினராக இல்லை. வேதனைப்பட வேண்டிய விஷயம்.
2008ல் மத்திய அரசு பாலகிருஷ்ண ரெங்கி தலைமையில் நம் மக்கள் நலனுக்காக ஒரு ஆணையம் நிறுவியது. அது அரசியல், கல்வியில் 10% இட ஒதக்கீடு, இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க வட்டியில்லா கடன், தனி நிதி நிறுவனம் போன்ற திட்டங்களுடன் PCRக்கு இணையான சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 76 பரிந்துரைகளை பார்லிமென்டில் சமர்ப்பித்தாலும் இன்றுவரை நிலுவையில் உள்ளது.
2015ல் மத்திய அரசின் பிகுராம்ஜி இடாடே தலைமையில் ஒரு ஆணையம் தமிழகமெங்கும் முக்கியமாக கீழத்தூவல், பசும்பொன் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இடைக்கால பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையில் மாவட்டத்தில் ஒரு குறை தீர்க்கும் மையம், இலவச வீட்டுமனை போன்ற சில பயனுள்ள திட்டங்களை நமக்காக பரிந்துரை செய்தாலும் இன்னும் நிலுவையில் உள்ளது.
2015ல் மத்திய அரசு DNT மாணவர்களுக்கு அறிவித்த மூன்று பெரிய சலுகைகள்:
மாதம் 500 முதல் 1200 வரை உதவித்தொகை
ஒரு மாணவனுக்கு ரூ.3,50,000 செலவில் தங்குவதற்கு விடுதி வசதியும், பர்னிச்சருக்கு 30000
அயல்நாட்டுக் கல்வி முற்றிலும் இலவசம்
ஆனால் இந்த மூன்று சலுகைகள் இந்தியா முழுவதும் உள்ள DNT மாணவர்களுக்கு கிடைத்தாலும் தமிழக DNC மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஐந்தாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஈஸ்வரய்யா பரிந்துரைப்படி 9% இட ஒதுக்கீடு சொல்லியும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆக 1911 முதல் இன்றுவரை ஆங்கிலேய மற்றும் இந்திய மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறோம்.
நமது கோரிக்கைகள்:
மாநிலம் முழுவதும் மறவர்களுக்கு மத்திய அரசின் 2008 ரெங்கி கமிஷன் பரிந்துரைப்படி ஒரே சாதிச் சான்றிதழ்(சீர் மரபினர்) வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சீர் மரபினருக்கென்று தனியாக 11% இட ஒதுக்கீடு கொடுப்பது போல் தமிழகத்திலும் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும்.
DNCஐ DNTஆக மீண்டும் மாற்றி இலவச உயர்கல்வி கொடுக்க வேண்டும்.
கடந்த105 ஆண்டுகளாக ஏமாற்றத்தை மட்டும் சந்தித்த மறவர் சமுதாயமே!
விழித்தெழு! DNTக்கு போராடு!!
மக்களே ஒன்று சேர்வோம்!!! போராடுவோம்!!!
DNT பெற்றே தீருவோம்!!! இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவோம்!!!
CT Act (கைரேகை சட்டம்)
இன்று குற்றம் செய்யும் தனிநபர்கள் கோர்ட் உத்தரவுப் படி நிபந்தனை ஜாமினில் அல்லது 30நாட்கள் ஒரே ஊரில் கோர்ட்டில் கையெழுத்திடுவது போல் அன்று 1911ம் ஆண்டு எந்த ஒரு குற்றமும் செய்யாமல் ஒட்டுமொத்த மறவர்(DNT) சாதி மக்களும் அவர்கள் வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல முடியாமால் 36 ஆண்டுகள் கிராம முன்சீப்(போலிஸ்) கண்காணிப்பில் வாழ்ந்து வந்தோம். மீறினால் சிறையில் அடைக்கப்படுவோம். சில கிராம மறவர்கள் போலிஸ் ஸ்டேஷனில் இரவு 11 மணிக்கும் காலை 4 மணிக்கும் கையெழுத்துப் போடும் கொடுமையும் இருந்தது. ஏகப்பட்ட மறவர்கள் மூணாறு, இலங்கை, பர்மா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு அடிமைகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுசெல்லப்பட்டனர். போலிசுக்குப் பயந்து தப்பிச்சென்ற காடு, மேடுகளில் மற்ற மாவட்டங்களில் மறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த மறவர் மக்களுக்கு இன்றுவரை சொந்த மாவட்டம் இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் பெயரைத் தவிர வேறு விவரம் தெரியாமல் மற்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தக் கடுமையான சட்டத்திற்கு பெயர்தான் CT Act (கைரேகை சட்டம்) என்ற குற்றப்பரம்பரைச் சட்டம். இந்த சட்டம் தேவரின் கடும் முயற்சியால் தமிழ்நாட்டில் மட்டும் சுதந்திரத்திற்கு முன் 1947ல் ஜூன் மாதம் நீக்கப்பட்டது.
இந்த கொடுமையான சட்டத்தால் பாதிக்கப்பட்ட மறவர் மக்களுக்காக 1942ம் ஆண்டு ஆங்கிலேய அரசு "மறவர் சீர்திருத்தத் திட்டம்" என்ற திட்டதின் மூலம் கட்டாயக்கல்வி, வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை, உழுவதற்கு இலவச நிலம், நிதி உதவிக்கு தனி சொசைட்டி போன்ற உதவிகளைக் கொடுக்க முயற்சித்தது. நிதிப் பற்றாக்குறையால் திட்டம் கைவிடப்பட்டது. இப்படித்தான் முதன்முறையாக மறவர் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
சுதந்திரத்திற்குப் பின் 1952ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த அய்யங்கார் கமிசன் பரிந்துரைப்படி வட இந்தியாவில் சில மாநிலங்களில் DNT மக்களுக்கு மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கிடைத்தன. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆங்கிலேய ஆட்சியில் அனுபவித்து வந்த ஒருசில சாதிகளுக்கு மட்டும் தமிழக அரசு மீண்டும் கொடுத்தது. இதுவரை ஒரு சலுகையும் அனுபவிக்காத மறவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
மாறாக HOA பழக்கவழக்க குற்றவாளிகள் என்ற சட்டத்தை நம்மீது திணித்தார்கள். அந்த சட்டம் இன்றுவரை தொடர்கிறது. குற்றப் பரம்பரை என்ற பெயரை சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என மாற்றினர்.குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழுகின்ற மறவர்களுக்கு DNT என்றும் ஏற்கனவே CT Actல் பாதிக்கப்பட்டுத் தப்பிச் சென்ற மற்ற மாவட்டங்களில் வாழும் மறவர்களுக்கு BC எனவும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் கல்லூரியில் படிக்கும் DNT மறவர்களுக்கு மட்டும் தமிழக அரசு இலவச உயர்கல்வி அளித்தது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதைப்பற்றி நம் மக்களுக்கு( மறவர்) சரிவர தெரியவில்லை. அதுவும் ஏறக்குறைய ஏமாந்த நிலைதான்.
1970ல் தமிழக அரசு அமைத்த "சட்டநாதன் கமிசன்" பரிந்துரையில் "மறவர் சீர்திருத்தத் திட்டம்" அமைத்து மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கொடுக்க பரிந்துரை செய்தும் தமிழக அரசு மறவர் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் கொடுக்கவில்லை. மூன்றாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
1979ல் தமிழக அரசு, மத்திய அரசு கூறியது என்ற பொய்யான காரணத்தைக் கூறி DNCயாக மாற்றியதால் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் பறிபோனது. நான்காவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
1989ல் MBCக்கு இணையாக DNCயை கருதி ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு தமிழக அரசு வேலைவாய்ப்புக்காகக் கொடுத்தது. இந்த MBC சலுகையை அனைத்து DNC சாதிகளும் தமிழகமெங்கும் அனுபவிக்கிறது. ஆனால் மறவர்கள் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட மாவட்ட மறவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முதலில் நமக்கு பயனுள்ள திட்டமாக தெரிந்தாலும் அரணியல், அரசாங்க அதிகாரிகள், நல்ல கல்லூரி உடைய வன்னியர் போன்ற பெரிய சாதிகளோடு போட்டி போட முடியாமல் அரசு உத்தியோகங்களில் நமது மறவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதுவும் ஏறக்குறைய ஏமாற்று வேலைதான்.
2007ல் தமிழக அரசு DNC மக்களுக்காக "சீர்மரபினர் நலவாரியம்" என்ற திட்டம் ஆரம்பித்தது. இதில் நிறைய சலுகைகள் உள்ளன. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாததால் தமிழகம் முழுவதும் இன்றுவரை மறவர்கள் 500 பேர்கூட இதில் உறுப்பினராக இல்லை. வேதனைப்பட வேண்டிய விஷயம்.
2008ல் மத்திய அரசு பாலகிருஷ்ண ரெங்கி தலைமையில் நம் மக்கள் நலனுக்காக ஒரு ஆணையம் நிறுவியது. அது அரசியல், கல்வியில் 10% இட ஒதக்கீடு, இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க வட்டியில்லா கடன், தனி நிதி நிறுவனம் போன்ற திட்டங்களுடன் PCRக்கு இணையான சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 76 பரிந்துரைகளை பார்லிமென்டில் சமர்ப்பித்தாலும் இன்றுவரை நிலுவையில் உள்ளது.
2015ல் மத்திய அரசின் பிகுராம்ஜி இடாடே தலைமையில் ஒரு ஆணையம் தமிழகமெங்கும் முக்கியமாக கீழத்தூவல், பசும்பொன் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இடைக்கால பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையில் மாவட்டத்தில் ஒரு குறை தீர்க்கும் மையம், இலவச வீட்டுமனை போன்ற சில பயனுள்ள திட்டங்களை நமக்காக பரிந்துரை செய்தாலும் இன்னும் நிலுவையில் உள்ளது.
2015ல் மத்திய அரசு DNT மாணவர்களுக்கு அறிவித்த மூன்று பெரிய சலுகைகள்:
மாதம் 500 முதல் 1200 வரை உதவித்தொகை
ஒரு மாணவனுக்கு ரூ.3,50,000 செலவில் தங்குவதற்கு விடுதி வசதியும், பர்னிச்சருக்கு 30000
அயல்நாட்டுக் கல்வி முற்றிலும் இலவசம்
ஆனால் இந்த மூன்று சலுகைகள் இந்தியா முழுவதும் உள்ள DNT மாணவர்களுக்கு கிடைத்தாலும் தமிழக DNC மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஐந்தாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஈஸ்வரய்யா பரிந்துரைப்படி 9% இட ஒதுக்கீடு சொல்லியும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆக 1911 முதல் இன்றுவரை ஆங்கிலேய மற்றும் இந்திய மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறோம்.
நமது கோரிக்கைகள்:
மாநிலம் முழுவதும் மறவர்களுக்கு மத்திய அரசின் 2008 ரெங்கி கமிஷன் பரிந்துரைப்படி ஒரே சாதிச் சான்றிதழ்(சீர் மரபினர்) வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சீர் மரபினருக்கென்று தனியாக 11% இட ஒதுக்கீடு கொடுப்பது போல் தமிழகத்திலும் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும்.
DNCஐ DNTஆக மீண்டும் மாற்றி இலவச உயர்கல்வி கொடுக்க வேண்டும்.
கடந்த105 ஆண்டுகளாக ஏமாற்றத்தை மட்டும் சந்தித்த மறவர் சமுதாயமே!
விழித்தெழு! DNTக்கு போராடு!!
மக்களே ஒன்று சேர்வோம்!!! போராடுவோம்!!!
DNT பெற்றே தீருவோம்!!! இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவோம்!!!
No comments:
Post a Comment