Saturday, 23 September 2017

பசும்பொன் தேவர் திருமகனார் தெய்வத்தை காட்ட முடியுமா? என்று கேட்ட பெரியாருக்கு தேவர் கொடுத்த பதிலடி

பசும்பொன் தேவர் ஆன்மீக மேடையில் பேசிய உரை:

தெய்வத்தை இருக்கிறது என்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் காட்டியிருக்கிறார்களா? பார்க்க முடியுமா? காட்ட முடியுமா? பார்க்க முடியாத ஒன்றை காட்ட முடியாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லுவோரை நம்புவது மூடத்தன்மையல்லவா? அது மனிதனை பகுத்தறிவுடையனாக்க நல்ல உணர்ச்சியைத் தருமா? அந்த மூட நம்பிக்கை மனிதனின் வளர்ச்சியைக் கெடுக்காதா? என்று பேசுவது தற்கால நவநாகரிகம்.

அதைப் பரிசீலனை பண்ணிப் பார்ப்போம். நாம் நம் கையைப் பார்க்கிறோம். அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. கையில் ரேகைகள் இருக்கின்றன. கீழே கினிந்து பார்க்கிறோம். கால் இருக்கிறது. அதில் விரல்கள் இருக்கிறது. ஆனால் வேறு ரூபமாக இருக்கிறது. கை நீட்டவும், மடக்கவும், கொடுக்கவும், வாங்கவும் உதவுகிறது. கால் நடக்க உபயோகப் படுகிறது. இதை இரண்டையும் பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. ஆகவே ஒன்றை கால் என்றோம். மற்றொன்றைக் கையென்றோம். கண்ணைக் கொண்டு கையையும், காலையும் பார்த்தோம். கண்ணைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். அது முடியுமோ?

நான் பகுத்தறிவுவாதி கை பார்த்தேன் ஐந்து விரல் இருக்கிறது. ஆகையால் கையிருக்கிறது. காலைப் பார்த்தேன் ஐந்து விரல்கள் இருக்கிறது. ஆகையால் கால் இருக்கிறது. கண்ணைப் பார்க்க முடியவில்லை. ஆகையால் கண் இரூக்கிறது இருக்கிறது என்று சொன்னவன் முட்டாள். அப்படியென்று பரிகாசம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணினால் அவன் அறிவுடையவன் ஆவானோ?

மனிதனுக்கு எத்தனையோ அவயம் உண்டு அதில் பார்க்க முடிவதும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு. கையையும் காலையும் பார்க்க வசதியாகப் படைத்த தெய்வம் கண்ணைப் பார்ப்பதற்கு வசதியான இடத்தில் வைக்கவில்லை. அப்படியானால் கண் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதற்கு உதவ ஒரு கருவி வேண்டும். கண்ணாடி யை எடுத்துப் பார்ப்போமேயானால் கண்ணின் நிழல் அதில் பிரதி பிம்பமாகத் தெரியும். அதை அனுமான பிரமாணமாகத் தெரிந்து கொண்டு அடுத்தவன் கண்ணைப் பிரத்தியட்ச பிரமாணமாகத் தெரிந்து கொண்டு இரண்டையும் கலந்து கண் நமக்கு இருக்கிறது என்று அறிவின் பெயரால் முடிவுக்கு வருகிறோம்.

அதற்குமேல் "மனம்" என்று ஒன்றிருக்கிறது. அதை எல்லோரும் பார்க்க முடியுமா என்றால் முடியாது. "புத்தி" என்ற ஒன்று இருக்கிறது. "அகங்காரம்" என்ற ஒன்றிருக்கிறது. இதற்கெல்லாம் அஸ்திவாராமாக "சித்தம்" இருக்கிறது. இவைகளை நாம் பார்க்க முடியாது. ஆனால் அவைகள் செயல்படுவதன் மூலம், மனம், புத்தி, சித்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.

காஞ்சிபுரத்தில் கூட்டம் நடக்கிறது. அதில் தேவர் பேசுகிறாராம். நாம் போய் கேட்கலாம் என்ற எண்ணத்தை எழுப்பித் தருவது மனம் அப்போது மனம் வேலை செய்கிறது.

அதற்குமேல் அதிக நேரமாயிற்றே நாம் இவ்வளவு பிந்திப்போனால் பிரசங்கம் முடிந்துபோய் இருக்குமோ, என்னவோ? என்று நினைக்கிறபோது புத்தி வேலை செய்கிறது.

அதற்குமேல் இடம் கிடைக்குமோ என்னவோ, கிடைக்காவிட்டால் தள்ளதாவன் இருப்பானேயானால் அவனைத் தள்ளிவிட்டு உட்காருவோம் என்கிறபோது அகங்காரம் வருகிறது. இந்த மூன்றிற்கும் அஸ்திவாரமாகச் சித்தம் இருக்கிறது. இதற்கு அப்பால் உயிர் இருக்கிறது. அதையாராவது பார்த்திருக்கிறார்களா? என்றால் இல்லை.

இப்போது "எக்ஸ்ரே" என்கிற விஞ்ஞானக் கருவி வந்திருக்கிறதே உள்ளேயிருப்பதைப் பார்க்க. அந்தக் கருவி மூலம் உயிரைப் பார்த்திருக்கிறார்களா? என்றால் காணமுடியவில்லை.

கண்ணைக்கொண்டும் உயிரைப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் அறிஞன் "அறிவற்றவர்கள் உயிரிருக்கிறது என்று நம்புகிறார்கள். உயிர் என்ற ஒன்று இருக்குமேயானால் அதை யாராவது பார்த்திருக்க வேண்டாமா? பார்த்தவன் இருந்தால் அடுத்தவனுக்குக் காட்ட வேண்டாமா? தோழர்களே உயிரைப் பார்க்க முடியாததால் பார்த்தவர்கள் இல்லாததால் அடுத்தவர்களுக்குக் காட்டாததால் உயிர் இருக்கிறது என்று நம்புவது மூட நம்பிக்கை ஆகையால் எனக்கும் உயிரில்லை" என்றால் அறிவாளி என்று ஒத்துக்கொள்ள முடியுமா? தனக்குத் தானே உயிர் இல்லை என்று சொல்லுவானேயானால் மயானத்துக்கு வரலாமே என்றுதான் அவனைக் கூப்பிடுவார்கள்.

ஆகவே பார்க்க முடிகிற பொருளும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு.

இப்போது எனக்கு மாலை போட்டார்கள் அதன் ஊடே என்ன இருக்கிறது என்றால் "சிவந்தி பூ" என்று சொல்லலாம், என்ன நிறம் என்றால் "மஞ்சள் நிறம்" என்று சொல்லலாம். சிவந்திப் பூவின் வாசத்தைச் சொல்லு என்றால் அதை முகர்ந்து பார் என்றுதான் சொல்ல முடியுமே தவிர அதனுடைய வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது. அதேபோல ரோஜா வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது.

சாக்கரை என்றால் என்ன கேட்டால் உற்பத்தியாகிற இடம் அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதனுடைய இனிப்பு எப்படியிருக்கும் என்று சொல்ல வார்த்தையுண்டா? "வாங்கித் தின்று பார்" என்றுதான் சொல்லலாம். இவைகளை எல்லாம் உணர்ச்சியின் பெயரால் மனதில் உறுதி கொள்ள வேண்டுமே தவிர ஒருவருக்கு ஒருவர் சொல்லித் தெரிந்து கொள்ளுவது அல்ல.

அப்படியிருக்கும் போது தெய்வீகம் தெய்வபக்தி என்பதை அவனவன் அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டுமே தவிர எனக்குக் காட்டு என்று ஆங்கிலம் படித்த கத்துக் குட்டிகள் ஆங்கிலேயன் கைக்கூலிகள் கேட்டால் அது முறையாகுமா?

தெய்வம் தெய்வீகம் உண்டு என்பதைத்தான் பாரதியார் போன்றவர்கள் சொன்னார்கள். இப்படி மானங்கெட்டுப் போகக் கூடாது என்பதற்குத்தான் ஆன்றோர்கள்.

"முகத்தின் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தின் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்" என்றார்கள்

"காந்தியை சுட்டுக்கொலை செய்த போது நடந்த கலவரத்தை பசும்பொன் தேவர் தடுத்தார்"

1948 காந்திஜீ கொலை செய்யப்பட்ட போது ஊரை ஒரு முஸ்லீம் தான் கொலை செய்தான் என்று வதந்தி பரவியது காந்திஜீயை சுட்டது முஸ்லீம் தான் என்று பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது பொது மக்கள் முஸ்லீம்களை தாக்கியும் அவர்களது கடையை அடித்து நொறுக்கியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர் அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சுட்டது இஸ்லாமியர் இல்லை இந்து தான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் விதமாக பொதுக்கூட்டம் போட்டு உண்மையை விளக்கினார்.

முத்துராமலிங்க தேவர்  இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தெரு தெருவாக பிரச்சாரம் செய்யவும் ஊர்வலங்கள் நடத்தவும் தேவர் தனது தொண்டர்களை அனுப்பி வைத்தார்.

காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர். இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர்.

எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம்.

இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம்.

"பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் அவர்கள் மாபெரும் தேசத்தலைவர்"

1952 ஆண்டு முத்துராமலிங்க தேவர் அவர்கள் பொது கூட்டங்களில் ஒரு செய்தியை சொன்னார்கள் அது " நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறார் எந்த நேரத்திலும் வருவார் " என்பதுதான்.
இதை கேட்ட நேரு அவர்களுக்கு பயம் ஏற்பட்டது . மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்தது. நேதாஜி உயிரோடு இருப்பதை முத்துராமலிங்க தேவர் அவர்கள் அந்த கமிஷனிடம் தெரிவிக்கவேண்டும் என்று அந்த கமிஷன் அறிவித்தது.

அதற்கு தேவர் அவர்கள் " இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் தொடர்பு வைத்திருந்த தலைவர்களை பிடித்து நேசநாடுகளிடம் (அமெரிக்கா ,இங்கிலாந்து ,ரஷிய) ஒப்படைக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது அதில் நேதாஜி அவர்களின் பெயர் இருக்கிறதா என்பதை மத்திய அரசு அறிவித்தால் நான் கமிஷனிடம் சாட்சியம் அளிக்கமுடியும் " என்று சொன்னார்கள் .

மத்திய அரசும் அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. தேவர் அவர்களும் கமிஷனில் சாட்சியம் அளிக்கவும் இல்லை.

நேதாஜி எந்தநேரத்திலும் வந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தில் தேவர் அவர்கள்மீது பொய்யான வழக்கை அன்றைய முதல்வர் காமராஜரை போடவைத்தவர் நேரு. இந்த வழக்கு பொய் வழக்கு என்று நீதிமன்றமே அறிவித்தது.

தேவர் ஒன்றும் பெரியாரை போன்று, காமராஜரை போன்று குண்டுச்சட்டி தலைவரும் அல்ல. எடுபிடுயும் அல்ல. அவர் மாபெரும் உலக தலைவர் .

இந்திய தேசிய ராணுவம் (INA ) அமைப்பதற்கு மூலகாரணம் தேவர் அவர்கள். அந்த ராணுவத்தில் 80 சதவீதம் தமிழர்கள் இருந்து போரிட்டனர். இது யாரால் தேவர் அவர்களால்..

ஜெர்மனி அதிபர் ஹிட்லர் முத்துராமலிங்க தேவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்பி அவரை ஜெர்மனிக்கு அழைத்து " உங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்தேன். நீங்கள் உறுதிகொடுத்தால் நான் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவிசெய்கிறேன் என்றார் " அதற்கு தேவர் அவர்கள் " உங்கள் உதவிக்கு எங்கள் நாட்டை நீங்கள் கேட்கக்கூடாது " என்று உறுதிவாங்கினார் ஹிட்லரிடம் .

ஹிட்லரிடம் நேரில் பேசியவர்கள் இரண்டு இந்தியர்கள்மட்டுமே. ஒன்று நேதாஜி இன்னொருவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்

பர்மா எல்லை பிரச்சனைக்கு தாய்லாந்துடன் பேசுவதற்கு பர்மா அரசாங்கம் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைத்தான் அழைத்தது. காமராஜரையோ ,பெரியரையோ அல்ல...

முத்துராமலிங்க தேவர் அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு பெரியார் தகுதியானவர் கிடையாது.

தேவர் பக்தனின் வேண்டுகோள்!

தேவர் இன மக்களே ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படியுங்கள் (கள்ளர்,மறவர்,அகமுடையர்) முக்குலத்தோர்.தேவரின மக்கள் முவேந்தர்கள் ஆகிய (சேர,சோழ,பாண்டிய) மன்னர்களின் வம்சாவளியினர் (கள்ளர்,மறவர்,அகமுடையர்).உலகிலேயே முதன் முதலாக தோன்றிய அதி குடி முக்குலத்தோர் கள்ளர்களின் DNA முலம் கடந்த 2010-ம் ஆண்டு நிருபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக முதலில் போரிட்ட மாவீரர் புலித்தேவர் நமது தேவர் இனம்.சிவகங்கை சீமையில் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்கள் நமது தேவர் இனம் உலகிலேயே முதன் முதலாக அணை காட்டிய கரிகாலச்சோழன் நமது தேவர் இனம்.இலங்கை முதல் இமயமலை வரை ஆட்சி செய்த இராஜராஜசோழன் நமது தேவர் இனம் .உலகத்தில் உள்ள 7 கண்டத்திலும் வாழும் ஓரே இனம் நமது தேவர் இனம்.வெள்ளையனுக்கு எதிராக முதல் முதலாக போரிட்ட வேலு நாச்சியார் நமது தேவர் இனம்.மருதுபாண்டிய மன்னர்களுக்காக உயிர் தியாகம் செய்த வாலுக்குவேலி அம்பலம் நமது தேவர் இனம் தனக்கு சொந்தமான 32 கிராமங்களை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்த பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் ஐயா நமது தேவர் இனம். கல்வி தந்தை என அழைக்கப்படும் பி கே முக்கையாத்தேவர் நமது தேவர் இனம் .இப்படி எல்லாம் இருக்கின்ற நமது தேவர் இனத்தில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இன்று நாம் அனைவரும் மற்றனுக்கு கொடி பிடித்து கொண்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்து வந்த மலையாளி எம்ஜிஆர் பெயரை மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்துக்கும் வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் எம்ஜிஆர் என்கிற மலையாளிக்கு நமது பாட்டன் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து விழா நடத்துக்கிறார்கள் எம்ஜிஆர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகி இல்லை அப்புறம் எதற்கு விழா ? தமிழகத்தில் ஒரு தெலுங்கர் பெரியார் வைத்து அரசியல் செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போய் கொண்டு இருக்கிறோம் திராவிட கட்சிகள் நமது உரிமையை பாரிக்கின்றன.திராவிட கட்சிகள் தேவர் ஜெயந்திக்கு 144 தடை பொடுகின்றன (144 தடை என்பது திவிரவாதிகளுக்கும் போட கூடியது)ஏன்? தெய்விக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜெயந்தி விழாக்கு 144தடை ? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா தேச தலைவர் அவர் ஜெயந்தி விழாக்கு ஏன் தடை ? காரணம் உள்ளது கள்ளர் மறவர் அகமுடையர் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்க்காக தான் உலகிலேயே எந்த ஒரு தேச தலைவர்க்கும் தனது ஜெயந்தி விழாவில் பலலட்சம் மக்கள் கூடுவதில்லை.ஆனால் தேச தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாக்கு பலலட்சம் மக்கள் கூடுகிறார்கள். மக்கள் கூடக்குடாது என்பதற்காகத்தான் மேலும் தேவரின மக்களை திராவிட கட்சிகள் பிரித்துவைத்துள்ளனர் தேவர் இன மக்கள் அனைவருமே 40 வருடங்களுக்கு முன்பு DNT (Denotified Tribes) என்று தான் இருந்தோம் பிறகு எம்ஜிஆர் DNT ல இருந்து DNC மாற்றி பல சலுகைகள் பரிக்கப்பட்டன நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் அகில இந்தியா பார்வேர்டு பிளாக் கடந்த 1939 ம் ஆண்டு நமது தேச தந்தை மாவீரர் நேதாஜி மற்றும் முக்குலத்தோரின் தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்டது .இந்த அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் தான் நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மற்றும் பி கே முக்கையாத்தேவரும் (MLA MP) மற்றும் இருவரும் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்து பல சாதனை புரிந்துள்ளனர் நமது தேவர் இனத்தில் பல கட்சிகள் உள்ளன அதேபோல் பார்வர்டு பிளாக் கட்சிகளிலும் பல கட்சிகள் உள்ளன .இனி நாம் தேவரின அனைத்து கட்சிகளையும் தேவர் ஐயாவின் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியுடன் ஒண்றினைத்து நமக்கான புதிய விடியாளை நோக்கி பயணிப்போம் விரைவில் DNC ல இருந்து DNT மிட்டெடுப்போம் அனைத்து திராவிட கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் .நமக்கான தேவர் ஐயா அவர்களின் புலிக்கொடி தாங்கிய அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் இணைவோம் வரும் (30-10-2017) தேவர் ஜெயந்திக்குள் ஒன்று படுவோம்
""ஜெய்ஹிந்த் "" இந்த பதிவை மிக மிக அதிகமாக பகிரவும்

*மருத்பலன்*= *மர்தான்*= *மறவன்*( *தேவர்கள்*=* *அமரர்கள்*) *தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு*

*மருத்பலன்*=
*மர்தான்*=
*மறவன்*(
*தேவர்கள்*=*
*அமரர்கள்*)
*தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு*

மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது.
'மறவர்' என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது.

சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு அவர்கள் சிந்திய குருதி ஆற்றின் மீது தான் நம் தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டு வந்திருக்கின்றனர்.

"போரெனிற் புகலும் புனைகழல் மறவர்"(புறம்:182)

இன்னோர் புறப்பாடலில் போர்க்களங்களில் இரவில் களத்திலே உறங்கும் நெஞ்சுறுதி கொண்டதாக பாடல் ஒன்று கூறுகின்றது.

இன்று பல ஈனர்கள் இந்த தேவர் என்னும் பட்டம் அவனுக்கு இருக்கிறது இவனுக்கு இருக்கிறது ஒரு கிழ்மகனுக்கு உள்ளது என வக்கிரகேலிகளை வலைதளங்களில் கானலாம். இந்த வஞ்ச பொறாமையை என்னவென்று கூறுவது.

*தேவர் என்பது பட்டபெயர் தானா அல்லது காரணப்பெயரா*?

ஏனெனில் ஒரு அடையாளப்பெயர் நிச்சயமாக பலரும் சூடும் பட்டப்பெயராக இருக்காது. தொழிலின் அடிப்படையிலே சாதிப்பெயர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மருத்துவன்,காவலன்,புலவன்,பாணன் என்பது போல நிச்சயமாக இந்த "தேவர்" என்னும் பெயர் நிச்சயமாக பட்டப்பெயராக இது காரணப்பெயராக பன்புபெயராக மட்டுமே இருக்கும் ஏனெனில் அது பட்டப்பெயர் நிலைக்காது. இன்று ஒரு பனக்காரனாக இருப்பவன் நாளை ஏழை ஆகலாம் அனால் அவனது இனப்பெயர் என்றும் மாறாது.

எனவே "தேவர்" என்பது பன்பு பெயர்தான் என இங்கு சில மேற்க்கோள்களின் மூலம் விளக்கலாம்.

நம்மை தமிழ் மொழி "மறவர்" எண்கின்றது. இதைப்போல் தமிழில் வரும் பல சொற்க்கள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது எடுத்துக்காட்டாக "ராஜா" "அரசர்", "ராஜ்ஜியம்","அரசாங்கம்" என ஒரே அர்த்ததையும் உச்சரிப்பையும் கொண்ட வார்த்தைகள் பல உள்ளது.

*தமிழ் அகராதி*

மறம்=வீரம்,கொலை
மறத்தொழில்=கொலைத்தொழில்
மறவன்=கொலை செய்தவன்,வீரன்
என்பதை போல

*மறவர்*=
*தேவர்*(
*அமரர்கள்*)
சம்ஸ்கிருதத்தில்: மாறோ=கொலை
மரணம்=கொலை,இறத்தல்
மர்தான்= மறவன்,கொலை தொழில் புரி வீரன்
மகிஷாசுரமர்த்தினி= மகிடனை கொன்ற தேவி
மர்த்தினி என்றால் கொலை செய்தவள் என அம்பாளை குறிக்கும். இதன் தமிழ் பதம் மறத்தி என்பதாகும்.

மர்த்தினி என்பதற்க்கு ஆண்பதம் தான் மர்தான் ஆதாவது திரிபுரமர்த்தனன் என திரிபுர சம்காரம் செய்த அழித்தலை தொழிலை கொண்ட ஈசனையே மர்தான் என அழைக்கிறது சமஸ்கிருதம்.

ஆகவே மர்தான் என்பவர்கள் சிவனின் மைந்தனான ருத்திரர்களை குறிக்கிறது சம்ஸ்கிருதம் இதைப்பற்றி,

*ரிக் வேதத்தில் மர்தான் மாருத் ருத்திரர்களை பற்றிய குறிப்புகள்*

மர்தான் என்னும் மருத்பாலர்கள் என்பவர்கள் ருத்திரர்கள்(அழிப்பவர்கள்) தோற்றம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படும் நம்பிக்கைகள். இவர்கள் வன்மையான தோற்றமும் என்நேரமும் போரின் மீது வேட்கை கொண்டவர்கள்.இவர்கள் சத்தியத்தின் காவலர்களாகவும் தர்மத்தின் மரு உருவமாக சாகசத்தில் பிரியம் கொண்டவர்கள். இவர்களின் தோற்றத்தில் அஞ்சதக்கவர்களாக கொடூரமான இயல்பை உடையவர்கள்.

அவர்கள் தங்க ஆயுதங்கள் மின்னல் மற்றும் இடிபோன்றது.அதாவது இரும்பு பற்கள் கொண்ட சிவந்த குதிரைகள் பூட்டிய தங்க தேர்களில் சவாரி செய்பவர்கள் சிங்க கர்ஜனை போன்று ஆயுதங்களை பிரயோகம் செய்பவர்கள் . ரிக் வேதத்தில் (ஆறாம் பாசுரம் 66) மலைகளை புரட்டியும் காடுகளை கதிகலங்க செய்பவர்கள் என கூறுகிறது.

இவர்களை புராணங்கள் காஸ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் என விவரிக்கிறது.

இவர்களை ருத்திரர்கள் என கூறுகிறது வேதம். இவர்கள் மிக பராக்கிரம் பொருந்தியவர்களாக கூறுகின்றது வேதம்.

நாம் மேலே சுட்டிய யாவையும் ரிக் வேதத்தில் மறவர்களை பற்றி கூறியவை. மர்தான் என்பதற்க்கும் மறவன் என்பதற்க்கும் ஒரே அர்த்தம் மரணத்தை உண்டாக்குபவன் என பொருள்.

*தேவர்* *என்பது பட்டமல்ல காரணப் பெயர் தான்*

எனவே "தேவன்" என்றால் கொடூரமான அழிவை உண்டாக்கும் ருத்திரர்கள் என்பதன் பொருளுடைய சொல் தான் "தேவர்" என வழங்குகிறது. மருத்பாலர்களான் மர்தாண்களை அமரர்கள்(தேவர்கள்) என வழங்குகிறது வேதம்.

சிவபெருமாணை பெரியபுராணத்தில்,
"அறவனே பன்றியின் பின் ஏகிய மறவனே"
என அர்ச்சுனனிடம் பன்றியை வீழ்த்திய சிவனை கூறுகிறார் சேக்கிழார் இதற்க்கு பன்றிய வீழ்த்தியவன் என பொருள்

ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரமசோழனுலாவில்" மனுநீதி சோழனை
கன்றுக்காக மகனை தேரிலூர்த்திய மறவனே என கூறுகிறார் இதற்க்கு மகனை கொன்றவன் என பொருள் படுகின்றது.

எனவே மறவன் எனும் தமிழ் சொல் சம்ஸ்கிருதத்தில் மர்தான் எனவும் மருத்பாலன் என கூறுகிறது.

*மருத்பலன் மர்த்திக வீரன்* பாண்டியன் மன்னன்

பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி

மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன்
100 கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன்
கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன்
பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு
குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன்
நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் 105 மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்.....

பாண்டியனை மர்த்திக வீரன்(கொலை மறவன்) மருத்பலன்(ருத்திரன்) என செஞ்சடையன் சிவமைந்தன் என புகழ்கின்றது வேள்விக்குடி செப்பேடு.

தேவர் என்பது தமிழகத்தில் நம்மை மட்டுமே குறிக்கும்.  பல சாதியினரும் இதை தமக்கும் உண்டு. என்று சொன்னாலும். அவர்கள் அவ்விதம் வழங்கப்படுவதில்லை. மிகமிக பழமையான சான்றுகள் அன்றிலிருந்து இன்றுவரை நமக்கு மட்டுமே உள்ளன. எடுத்துக்காட்டாக ஆறாம் நூற்றாண்டிலேயே பாண்டியரின் செப்பேடுகளில் "கம்பலைத்தேவன்" எனும் மறவனைப்பற்றிய குறிப்புகள் உள்ளன
தெவ்வர் - தெய்வர்- தேவர் என இப்பெயரின் வேர்ச்சொல் மாறிவழங்கிவருகிறது.  தேவர் என்றால் மனிதருள் கடவுள் என்பதும்,  தலைவன்-அரசன் -உயர்ந்தவன்- மேலானவன் - வானுலகத்தேவர் போன்றவன் என்பதுவும் பொருளாகும்.
என மர்த்தானாகிய் சிவபெருமான் மற்றும் பார்வதி(மர்த்தினி) வம்சத்தில் உதித்த மறவனுக்கு "தேவன்" என்பது பட்டமல்ல பிறப்பு.




 *பாண்டிய வம்சத்தின் ஐந்து நிலை நாட்டார் மறவர்கள்குலம் ஒருங்கினைப்புகுழு*

Monday, 18 September 2017

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை!


"நீதியில் மறவன்; நல்ல
நோ்மையில் மறவன்;  நாட்டில்
ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்; எங்கள்
தமிழ்முத்து ராமலிங்கம்!
வாதிடும் திறமைக் கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!

நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச் சாாி!
இல்லறம் இல்லை; ஆனால்
ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ!"

பதிவு: சகோதரர் மருதுபாண்டியன் இரா.

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...