Saturday, 23 September 2017

"காந்தியை சுட்டுக்கொலை செய்த போது நடந்த கலவரத்தை பசும்பொன் தேவர் தடுத்தார்"

1948 காந்திஜீ கொலை செய்யப்பட்ட போது ஊரை ஒரு முஸ்லீம் தான் கொலை செய்தான் என்று வதந்தி பரவியது காந்திஜீயை சுட்டது முஸ்லீம் தான் என்று பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது பொது மக்கள் முஸ்லீம்களை தாக்கியும் அவர்களது கடையை அடித்து நொறுக்கியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர் அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சுட்டது இஸ்லாமியர் இல்லை இந்து தான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் விதமாக பொதுக்கூட்டம் போட்டு உண்மையை விளக்கினார்.

முத்துராமலிங்க தேவர்  இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தெரு தெருவாக பிரச்சாரம் செய்யவும் ஊர்வலங்கள் நடத்தவும் தேவர் தனது தொண்டர்களை அனுப்பி வைத்தார்.

காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர். இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர்.

எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம்.

இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம்.

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...