Monday, 18 September 2017

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை!


"நீதியில் மறவன்; நல்ல
நோ்மையில் மறவன்;  நாட்டில்
ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்; எங்கள்
தமிழ்முத்து ராமலிங்கம்!
வாதிடும் திறமைக் கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!

நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச் சாாி!
இல்லறம் இல்லை; ஆனால்
ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ!"

பதிவு: சகோதரர் மருதுபாண்டியன் இரா.

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...